
உண்மை
சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படத்தை வைத்து பரப்பப்பட்ட வதந்தியை பற்றி முழுமையாக
பார்க்கலாம் வாருங்கள்.
ஒரு உண்மை சம்பவத்தையும் அதை
தொட்டும் வரும் கட்டுக்கதைகளையும் வைத்து எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை வைத்து
சிலர் வாட்ஸ் அப்பில் இதை பகிராவிட்டால் கெட்டது நடக்கும் என பகிர்ந்துவிட்டனர்.
இது பல நாடுகளை தாண்டி பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது., அந்த பகிர்வுகளை
பற்றிய உண்மையை கீழே காணுங்கள்.
வாட்ஸ்
அப் பார்வேர்டு

ஏன் செய்கிறார்கள்?

teresa.jpg

அதிக பயம்

உண்மை சம்பவம்

அனா மேரி

1.30 மணி

விபத்து

புகார்
அப்பொழுது இந்த விபத்து நடந்தது
அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியவில்லை. இரவு சொன்ன நேரத்தையும் கடந்ததால்
மேரியின் தந்தைக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் ஒரு கட்டத்தில் போலீஸ்
ஸ்டேஷனிற்கு சென்று புகார் அளித்தார்.
மீட்பு
மறுநாள் காலையில் இப்படி ஒருவிபத்து
நடந்தது வெளியில் தெரிந்தது. அதில் அந்தகரிலிருந்த மேரியின் உடலையும் அந்த கார்
டிரைவரின் உடலையும் போலீசார் எடுத்தனர். அப்பொழுது மேரி வீட்டின் அக்கம்
பக்கத்தினர் மேரி குறித்து தவறாகப் பேசியதாகத் தெரிகிறது.
அடக்கம்
இந்நிலையில் மேரியின் உடலை புதை
அவர்கள் கல்லறை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் கல்லறை பணியாளர்கள்
எல்லாம் தற்போது ஸ்டிரைக்கில் உள்ளதால் அங்குப் புதைக்க முடியாது என
தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி மேரியின் தந்தை மேரியின் உடலை அவரது
வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திலேயே புதைத்துள்ளார்.
நல்லடக்கம்
பின்னர் சில நாட்கள் கழித்து ஸ்டிரைக்
முடிந்ததும் மேரியின் உடலை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் மேரியை
பலர் தவறானவள் என்றும், பலர் பல விதமாக பேசியுள்ளார். இதனால் கடும் கோபத்திலிருந்த
அவரது தந்தை அவரது கல்லறை அமைக்கப்பட்ட போதுஅதில் மேரியை தவறாக பேசிவர்களே மேரியே
வந்து பழி வாங்குவாள் என சபதம் செய்தார்.
மரணம்
அதன் பின் அந்த பகுதியில் ஒரு பெண்
குழந்தை பிறக்கிறது. அவளுக்கு எதார்த்தமாக மேரி என பெயர் வைக்க அந்த குழந்தை
வளர்ந்து 12 வயதை எட்டியபோது அந்த குழந்தை முதலில் மேரி விபத்தில் சிக்கிய அதே
இடத்தில் இவளும் ஒரு கார் விபத்தில் சிக்கினார். அதில் சம்பவ இடத்திலேயே
பலியாகிவிட்டார்.
பேய்
இப்பொழுது அந்த பகுதி மக்களுக்கு ஒரு
பயம் தொற்றிக்கொள்ளுகிறது. மக்கள் எல்லாம் முதலில் இறந்த மேரி தான் இந்த
சிறுமியைக் கொலை செய்துள்ளார் என நம்ப வைத்தது இதனால் மேரி ஒரு பேய் என்ற ரீதியில்
பலர் பேசினர். இது நாளடைவில் சிறு குழந்தைகளைக் கூட மேரி பேய் பிடித்துக்கொண்டு
போகும் என்கிற அளவிற்கு வைரலாக பரவியது.
லிப்ட்
இந்த கதை பல ஆண்டுகளாக பேசப்பட்டு
வந்தது. பலர் பல விதமாக இந்த கதைகளைப் பேசினர். சிலர் மேரி இரவு நேரங்களில் பேயாக
வந்து இன்று லிப்ட் கேட்பதாக கதைகள் சொல்லுகின்றனர். இந்த கதைகளை எல்லாம்
கேள்விபட்ட போர்த்திகீஷிய இயக்குநர் ஒருவர் ஒரு திரைப்படத்தை எடுக்க
விரும்பினார்.
வைரல்
கிட்டத்தட்ட மேரியின் இந்த கதையை
வைத்து அவர் எடுத்த திரைப்படம் தான் தெரசா ஃபிடல்கோ என்ற திரைப்படம் வெளியானது.
இந்த கதைதான் தெரசா ஃபிடல்கோ கதை என யாரோ வாட்ஸ் அப் எஸ்எம்எஸ் என உலாவ
விட்டுள்ளனர். இதுதான் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
திரைப்படத்தின் கதை
அந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால்
ஒரு குறிப்பிட்ட வீட்டை சுற்றி ஆண்கள் இரவு நேரத்தில் காரில் தனியாக வரும் போது
ரோட்டில் அழகான ஆடை அணிந்து ஒரு பெண் முகத்தில் சிரிப்பு இல்லாமல் ஒரு வித
பயத்துடன் லிப்ட் கேட்கிறார். அவருக்கு லிப்ட் கொடுப்பவர்களிடம் நன்றாக பேசும்
அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் காரை நிறுத்த சொல்கிறார்.
மேரி சபதம்
அவர் காரை நிறுத்தியதும் இங்கு தான்
நான் 27 மாதங்களுக்கு முன்பு இறந்து போனேன் அதனால் என்னை இங்கே இறக்கி விடுங்கள்
என சொல்லிவிட்டு காரில் உள்ள அந்த ஆணை கொலை செய்கிறார். அவர் கொலை செய்பவர்கள்
எல்லாம் அவர் இறந்த போது அவளைப் பற்றி தவறாகப் பேசிய ஆண்கள். அதாவது மேரி கதையில்ல
அவர் தந்தையின் சபதம் நிறைவேறுகிறது என படம் எடுக்கப்பட்டது.
சுற்றலில் உள்ளது
இந்த படத்தில் உள்ள காட்சிகளையும்
புகைப்படங்கள், அந்த திரைப்படத்தின் பேயின் பெயர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி
தான் குறிப்பிட்ட இந்த பார்வேர்டு மெசெஜ் அதிகமாக பகிரப்படுகிறது. இன்றும் அந்த
மெசெஜ் சுற்றலில்தான் உள்ளது.
தீராத மர்மம்
அதனால் இது போன்ற மெசெஜ்கள் உங்களுக்கு வந்தால் அதை பார்வேர்டு செய்யாமல் பேசாமல் இருப்பதே நல்லது. அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. இதே போல் தான் கடவுளின் புகைப்படத்தை பகிர்ந்து பலருக்குப் பகிரச் சொல்வது, உள்ளிட்ட பல மெசெஜ்கள், உங்களுக்கு வரும் மெசெஜ்கள் உங்களுக்கு உண்மை என 100 சதவீதம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு அனுப்புங்கள் இல்லை என்றால் அனுப்ப வேண்டாம். மேரி உண்மையில் தன் தந்தையின் சபதத்தை நிறைவேற்றினாரா? அப்பகுதியில் உள்ள மக்கள் சொல்வது எல்லாம் உண்மையா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தீராத மர்மம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக