Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்... பல லட்சம் ரூபாய் மோடி... இருவர் கைது!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரக்கூடிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்த பிரபு, சுரேஷ்பாபு ஆகிய இருவர் மீது மோசடி புகார் எழுந்தவுடன் துறைரீதியாக இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சென்னை எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் உயர்நிலை கண்காணிப்பாளராக பிரபு இடமாற்றம் செய்யப்பட்டார். டிரைவர் சுரேஷ்பாபு, கிருஷ்ணகிரி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருவர் மீதான புகாரின் அடிப்படையில் மாநகர குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தினர்.

இருவரும் கோவையில் பணியில் இருந்தபோது மாநகராட்சி, கல்வித் துறை, நீதித் துறை, கலெக்டர் அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் அரசு வேலை காலியாக இருப்பதாகவும், பணம்கொடுத்தால் உடனடியாக ஆர்டர் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி போலி நியமன ஆணைகளை வழங்கி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

மேலும் பொதுமக்களை ஏமாற்றியதாக தொடர் புகார்கள் பெறப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாநகர குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
samayam tamil
மேலும் விசாரணையில் 25 லட்சம் ரூபாய் வரைக்கும் மோசடி செய்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் ஏமாந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. பண மோசடி, முத்திரைத்தாள் தயாரித்தல், பணி ஆணைகளை போலியாக அடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக