Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 ஜூன், 2020

எந்த குழப்பமும் இல்லை! மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படாது: குஜராத் முதல்வர் திட்டவட்டம்

எந்த குழப்பமும் இல்லை! மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படாது: குஜராத் முதல்வர் திட்டவட்டம்
ஜராத்தில் மீண்டும் ஊரடங்கு (Lockdown in Gujarat) விதிக்கப்படுவது குறித்து யூகங்களும், செய்திகளும் வெளியான நிலையில், மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று மாநில அரசால் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (Gujarat Chief Minister Vijay Rupani) திங்களன்று தனது அரசாங்கம் மீண்டும் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை அமல் செய்ய எந்த திட்டமிடவில்லை (No Lockdown In Gujarat) என்று கூறினார். ஊரடங்கு குறித்து சமூக ஊடக தளங்களில் வெளியான செய்திகளை நிராகரித்த முதலமைச்சர், இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளால் மக்களை குழப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
மாநிலத்தில் COVID-19 தொற்று பதிப்பு அதிகரித்து வருவதால், தனது அரசாங்கம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து முதல்வர் ரூபானியின் (Vijay Rupani) அறிக்கை வந்துள்ளது.
ஜூன் 1 முதல், மாநிலத்தில் லாக்-டவுன் (Lockdown) தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தொழில்கள், அலுவலகங்கள், கடைகள், பஸ் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் கட்டுப்படுத்தப்படாத மண்டலங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
"ஜூன் 1 முதல் ஊரடங்கு (Unlock 1) தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அன்றாட வாழ்க்கை படிப்படியாக இயல்பானதாகி வருகிறது. வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் மாநிலத்திலும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் ஊரடங்கு விதிக்க மாநில அரசுக்கு எந்த திட்டமும் இல்லை" என ரூபானி தனது அறிக்கையில் கூறினார். 
COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கும்போது, ​​மக்களும் அதனுடன் வாழ கற்றுக் கொள்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஒரு மாதத்திலிருந்து, மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 புதிய கொரோனா வைரஸ் (New Coronavirus Cases) பாதிப்பு பதிவாகி வருகிறது.
இதற்கிடையில், திங்களன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்தியாவில் 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus In India) தொற்று என அதிகரித்துள்ளது. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 3.32 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் நேற்று 325 இறப்புகளுடன் மொத்த எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
நாட்டில் 1,53,106 கொரோனா வைரஸ் (Active coronavirus diseas)செயலில் உள்ளன, அதே நேரத்தில் 1,69,797 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் ஒரு நோயாளி குடியேறியுள்ளார் என்று காலையில் புதுப்பிக்கப்பட்ட அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுவரை 51.07 சதவீத நோயாளிகள் குணமடைந்து உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
கடந்த 24 மணி நேரத்தில் 11,502 புதிய தொற்றுநோய்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று இறந்த 325 பேரில் 120 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாகவும், டெல்லியைச் சேர்ந்த 56 பேரும், தமிழ்நாட்டிலிருந்து (Tamil Nadu) 38 பேரும், குஜராத்தில் 29 பேரும் ஆவார்கள். மேலும் உத்தரபிரதேசத்தில் 14 பேரும், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 12 பேரும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது நாடு இந்தியா.
உலகெங்கிலும் இருந்து COVID-19 தரவுகளைத் தொகுத்து வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!