Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 3 ஜூன், 2020

கொரோனா: பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு தயாராகிறது ஆப்பு?

பாதிப்பானவர்களை கண்டறிவதிலிருந்து தனிமைப்படுத்துவது வரை அரசு பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது.

இந்த சூழலில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் பலர் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இப்படி தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்பவர்களிடம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் குறைந்தது ரூ. 3 லட்சத்தை வைப்புத் தொகையாக வசூலித்த பிறகே சிகிச்சையைத் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் 112 தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான மருத்துவமனைகள் மக்களிடம் வசூல் வேட்டையைத்தான் நடத்தி வருகிறது.

சமீபத்தில் பத்திரிகைகள் நடத்திய ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்த அவலம், இப்போது சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ராஜேஷ் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனை நடத்தும் வசூல் வேட்டை தொடர்பாக பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு இடையே தமிழ்நாடு அரசு கொரோனா பரிசோதனை தொடர்பாகவே தனியார் மருத்துவமனைகளுக்கு சில உத்தரவுகளைப் பிறபித்துள்ளது.

அதன்படி, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளத் தனியார் மருத்துவமனைகள் ரூ. 4 ஆயிரத்து 500 மட்டுமே வசூலிக்க முடியும். ஆனால் சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “விரைவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ. 3ஆயிரம் நிர்ணயம் செய்யப்படும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!