>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 30 ஜூன், 2020

    PM SVANIDHI திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்; உத்தரவாதம் தேவையில்லை

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சின் செயலாளர் துர்காஷங்கர் மிஸ்ரா, பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனாவின் போர்ட்டலைத் தொடங்கி வைத்தார்.பிரதமர் ஸ்வநிதி யோஜனா ஜூன் 1 அன்று தொடங்கப்பட்டது.  பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 1 ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ், தெரு விற்பனையாளர்களுக்கு (Street Vendor) சிறிய அளவு கடன் வழங்கப்படும். இது மீதான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.

    கடன் பெற ஜூலை 2 முதல் பிரதமர் எஸ்.வி.நிதி போர்ட்டலில் (PM SVANidhi) விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்காக இணையதளத்தில் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தின் கீழ், சுய உதவிக்குழுவின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். மொபைல் பயன்பாடு மூலம் KYC செயல்முறையை மேற்கொள்ள முடியும்.

    பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், தெரு விற்பனையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இது வணிகத்தைத் தொடங்க அவர்களுக்கு உதவும். இந்த கடன் மிகவும் எளிதான விதிமுறைகளுடன் வழங்கப்படும். இதற்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை.

    கொரானா காரணமாக நாட்டில் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் தொடங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள், தெரு விற்பனையாளர்கள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலவை நிலையங்கள், பான் கடைகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 50 லட்சம் தெரு விற்பனையாளர்களுக்கு பயனளிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக