Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 13 ஜூலை, 2020

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

உலகில் ஒருசில நாட்களுக்கு ஒருமுறை நிலநடுக்கங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை இந்தியாவின் அந்தமான் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் என்ற அளவில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தெரிந்ததாகவும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள டிகலிப்பூர் என்ற பகுதியில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் எந்த சேதமும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!