>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 ஜூலை, 2020

    நைசா அரைக்குறதுன்னா இதுதானா... இது தெரியாம போச்சே... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ------------------------------------------------------------------------------
    கலக்கலான ஜோக்ஸ்...!!
    ------------------------------------------------------------------------------
    விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த வீட்டு நாய் அவரை பார்த்து அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது...

    விருந்தினர் : ஏன் இப்படி நாய் குரைச்சிக்கிட்டே இருக்குது?
    சின்னபையன் : அதோட தட்டில் யாராவது சாப்பிட்டால் அது அப்படிதான் குரைக்கும்.
    விருந்தினர் : 😣😣
    ------------------------------------------------------------------------------
    அண்ணன் : டேய் தம்பி எங்கடா போற?
    தம்பி : முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன்.
    அண்ணன் : அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு, ஒளிஞ்சு போற?
    தம்பி : அம்மா தான் நைசா அரைச்சுட்டு வரச்சொன்னாங்க...
    அண்ணன் : 😆😆
    ------------------------------------------------------------------------------
    பாலாஜி : டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்கு..
    பாபு : அது என்ன?
    பாலாஜி : என்னை அடிக்குறதுக்கு முன்னாடி, லைட்டா... ஸ்ட்ராங்கான்னு கேட்டுட்டு தான் அடிப்பா..
    பாபு : 😜😜
    ------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்?
    மாணவி : (சோகமாக) வரலாற்றில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்...
    ஆசிரியர் : 😐😐

    ------------------------------------------------------------------------------
      படித்ததில் பிடித்தது..!!
    ------------------------------------------------------------------------------
    🤰 வலியோடு போராடினால் தான் ஒரு பெண் தாயாக முடியும்...
    🦋 இருளோடு போராடினால் தான் புழு வண்ணத்துப் பூச்சியாக முடியும்...
    🌱 மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்...
    💪 வாழ்க்கையோடு போராடினால் தான் நம்மால் வரலாறு படைக்க முடியும்...!!
    ------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    ------------------------------------------------------------------------------
    குறள் :

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

    விளக்கம் :

    எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக