Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ரூ.10 -15 வரை உயரும் டோல் கட்டணம்: செப். முதல் அமல்!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

சுங்க கட்டணம் விலை உயர்வு குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இப்போது திருச்சியில் 8 சுங்கச் சாவடிகளில் 6ல் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரூ. 10 - 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக