>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 6 ஆகஸ்ட், 2020

    ஜிஎஸ்டி மோசடி: 10,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!



    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நான்கு அடுக்குகளின் கீழ் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்துக்கான ஜிஎஸ்டியை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், வரி செலுத்தாமல் மோசடி செய்யும் வழக்குகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

    இந்த ஆண்டின் ஜனவரி - முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 970 நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையாக ஒரு ரூபாய் கூட அரசுக்குச் செலுத்தவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 10,800 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூல் செய்துவிட்டு அதை அரசிடம் முறையாகச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளன. இந்த 10,800 நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி சட்டம் 3ஏ-இன் கீழ் டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


    இந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளித்து முறையாக வரியைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வரும் நிதியமைச்சருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்த தொழில் நிறுவனங்கள் செலுத்திய வரி மற்றும் அதன் விவரங்களை மணிஷ் சிசோடியா தலைமையில் டெல்லி வர்த்தக வரித் துறை சோதனை செய்தது. ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்துள்ள 7 லட்சம் நிறுவனங்களில் இதுவரையில் 15,000 நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிசோடியா தெரிவித்துள்ளார்.


    ஜிஎஸ்டி செலுத்தாமல் மோசடி செய்வதால் ஒவ்வொரு மாதமும் அரசின் வரி வருவாயும் குறைந்து வருகிறது. டெல்லியில் ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.3,777 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக