>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 26 ஆகஸ்ட், 2020

    பள்ளிகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ முடிவு!


    தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


    பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தனித் தேர்வர்களும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்பவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    பதினொன்றாம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருவதால் தனித் தேர்வர்கள் அதில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தனித் தேர்வர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதால் ஒரு ஆண்டு காலத்தை இழக்க நேரிடும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.


    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    அதைத் தொடர்ந்து கல்வித்துறை சார்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்.


    மேலும் அவர் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும் எனக் கூறினார். இதனால் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

    பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்துவரும் நிலையில் அரசு இதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக