Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

கொரோனாவால் ஒதுக்கப்பட்ட குடும்பம், ஆற்றில் குதித்து தற்கொலை..!

ஆந்திரா அருகே குடும்பத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததால் ஒதுக்கப்பட்ட குடும்பம் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் ஒதுக்கியதால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட மூவரின் சம்பவம் மனிதத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசய்யா. இவரது மனைவி சுனிதா (50). இந்த தம்பதிக்கு குமார் என்ற மகனும், அபர்ணா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில், நரசய்யா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து அரசு நெறிமுறைகளின்படி நரசய்யாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், குடும்ப தலைவனை இழந்து வீட்டில் தவித்து வந்த குடும்பத்தினரிடம் அக்கம்பக்கத்தினர் ஆறுதல் சொல்லவும் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் பேசுவதைக்கூட அனைவரும் நிறுத்தியுள்ளனர்.

இதனால், விரக்தி அடைந்த தாய் சுனிதா, மகன் குமார் மற்றும் மகள் அபர்ணா மூவரும் காரில் கொவ்வூர் பாலம் அருகே சென்று காரை நிறுத்திவிட்டு, பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஆள் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை குறித்து போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து நேரில் சென்ற போலீசார் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் சுனிதாவின் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அவர்களை தேடும் பணியில் மீட்பு பனியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் ஜேசிபி, டிராக்டர் மற்றும் குப்பை வண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்யும் செய்திகளும் வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!