Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 செப்டம்பர், 2020

"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், அதி வேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் பெற்ற ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப ஏவுகணையை (HSTDV) இந்தியா திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை அமைப்பை வேறு எந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளாலும் கண்டறியவோ ட்ராக் செய்யவோ இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
Successful flight test of Hypersonic Technology Demonstration Vehicle (HSTDV) from Dr. APJ Abdul Kalam Launch Complex at Wheeler Island off the cost of Odisha today. pic.twitter.com/7SstcyLQVo
रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 7, 2020
பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கிய மைல் கல் என, HSTDV வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.
I congratulate to DRDO on this landmark achievement towards realising PM’s vision of Atmanirbhar Bharat. I spoke to the scientists associated with the project and congratulated them on this great achievement. India is proud of them.
— Rajnath Singh (@rajnathsingh) September 7, 2020
" தற்சார்பு இந்தியா என்னும் பிரதமரின் குறிக்கோளை நிறைவேற்றுவதில் இது முக்கிய மைல்கல். இந்த சாதனைக்காக நான் DRDO-விற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசினேன், இந்த மாபெரும் சாதனைக்கு அவர்களை வாழ்த்தினேன். இந்தியா அவர்களை நினைத்து பெருமை கொள்கிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்தியா, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக