🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அசுர குருவான சுக்கிராச்சாரியாரை, தேவகுருவான பிரகஸ்பதி பகையாகவே எண்ணுகின்றார். இதனால் இங்கு பகை என்ற நிலையில் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 கௌரவமான வாழ்க்கையையும், மற்றவர்கள் கண்டு பயம் கொள்ளக்கூடிய உருவத்தோற்றத்தையும் கொண்டவர்கள்.
🌟 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள். எளிதில் எதையும் மறக்கமாட்டார்கள்.
🌟 தனம் சம்பந்தமான செயல்பாடுகளில் நுணுக்கமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 சிக்கனமாக வாழ விரும்புபவர்கள். அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பார்கள்.
🌟 எடுத்த செயலை நிதானமாக செய்து முடிப்பவர்கள். இதனால் சிறிது காலதாமதம் உண்டாகும்.
🌟 ஆன்மீக எண்ணங்களும், வேதங்களின் மீது நம்பிக்கையும் உடையவர்கள்.
🌟 நல்ல தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.
🌟 தன்னை பற்றி உயர்வாகவும், பெருமையாகவும் பேசக்கூடியவர்கள்.
🌟 தன்னுடைய செயலை மற்றவர்களை கொண்டு செய்து முடித்து கொள்வார்கள்.
🌟 எதற்காகவும், யாருக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.
🌟 இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை வழி நடத்தும் திறமை உடையவர்கள்.
🌟 குருமார்கள் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள்.
🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சாதுர்யமாக சமாளிக்கக்கூடியவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக