Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த புதிய அமைப்பு! – மத்திய அமைச்சர் தகவல்

 prakash javadekar


 

ஆன்லைன் ஓடிடி தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஓடிடி தளங்களை கண்காணிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் ஓடிடி தளங்கள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஓடிடி தளங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் இடம் பெறுவதாகவும், ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு தணிக்கை தேவை எனவும் பலர் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் ஓடிடி தளங்கள், யூட்யூப் சேனல்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் புதிய அமைப்பை உருவாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அனைத்து இணைய தொடரும், படங்களும் தணிக்கை செய்யப்பட்டு வெளியாகும் என கூறப்படுகிறது

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!