கலக்கலான காமெடிகள்...!!
--------------------------------------------------------------------
ஆசிரியர் : உன்னை வரிசையில கடைசிலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்த?
மாணவன் : கடைசில ஏற்கனவே வேற ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் சார்..
ஆசிரியர் : 😟😟
--------------------------------------------------------------------
குமார் : எனக்கு நாக்குல புண்ணு வந்திருக்குன்னு நான் சொல்லாமலே என் மனைவி கண்டுபிடிச்சுட்டா..!
ராஜ் : எப்படி..?
குமார் : அது தெரியலை.. ஆனா என்னை கரெக்டா 'புண்ணாக்கு.. புண்ணாக்கு"னு கூப்பிடுறாளே..!
ராஜ் : 😂😂
--------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
--------------------------------------------------------------------
குகைக்குள் இருந்து பரபரப்புடன் தன் கணவரை நோக்கி ஓடி வந்தாள் அந்த ஆதிவாசிப் பெண்.
'ஆபத்து! என் அம்மா தங்கியிருக்கும் குகைக்குள் ஒரு புலி வந்துவிட்டது. காப்பாற்றுங்கள்" என்று அலறினாள்.
அவள் கணவன், 'நான் என்ன செய்ய முடியும்? புலிக்கு அதிர்ஷ்டமிருந்தால் தப்பிப் பிழைக்கட்டும்" என்றான் அமைதியாக.
--------------------------------------------------------------------
பிறமொழிச் சொற்கள் - தமிழ் சொற்கள்...!!
--------------------------------------------------------------------
1. விவாகம் - திருமணம்
2. பட்டாளம் - படைப்பிரிவு
3. சன்னல் - காலதர்
4. உத்தரவு - கட்டளை
5. உபயோகம் - பயன்
--------------------------------------------------------------------
டங்கு ஸ்லிப் ஆகுதா?
--------------------------------------------------------------------
ஆனை அலறலோடு அலற அலறியோட.
சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி.
துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும்.
--------------------------------------------------------------------
இன்றைய புதிர்..!!
--------------------------------------------------------------------
இதற்கு இலையிருக்கும் ஆனால் கிளை இருக்காது.
பூ இருக்கும் ஆனால் மணம் இருக்காது.
காய் இருக்கும் ஆனால் விதை இருக்காது.
கன்று இருக்கும் ஆனால் அது பசு அல்ல. அது என்ன?
.
.
வாழைமரம்
--------------------------------------------------------------------
சில எதார்த்தங்கள்..!!
--------------------------------------------------------------------
சிலரிடம் யோசித்து பேச வைக்கும். சிலரிடத்தில் பேசவே யோசிக்க வைக்கும்.
நம்பகத்தன்மைக்கு எதிராக நடந்து கொள்பவர்களிடம் ஒன்றி செல்வதை விட ஒதுங்கி செல்வது உத்தமம்.
எல்லோரையும் நம்பிக்கொண்டே இருக்காதீர்கள். ஏனென்றால், சிலருக்கு மட்டும் தான் நம்பிக்கையை காப்பாற்றும் பழக்கம் இருக்கிறது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக