----------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------------------
கமல் : என்னடா யோசிச்சுட்டு இருக்க?
விமல் : அடிக்கிற வெயிலுக்கு, மண்டைல முடி முளைச்சதுக்கு பதிலா, செடி முளைச்சிருந்தா நிழலாவது கிடைச்சிருக்கும் இல்லடா...
கமல் : 😠😠
----------------------------------------------------------------
ராமு : இந்த உலகத்துல எங்க தேடினாலும் நல்லவங்க கிடைக்க மாட்டாங்க...
சோமு : ஏன்?
ராமு : ஏன்னா நான் தான் வீட்டுல இருக்கல...
சோமு : 😥😥
----------------------------------------------------------------
எமதர்மனின் இன்டர்வியூ...!!
----------------------------------------------------------------
ஒரு எச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.
அங்க எமதர்மன் 'வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்துலயும், ஒரு நாள் நரகத்துலயும் தங்கணும். அப்புறம் சொர்க்கமா, நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்" என்று கூறினார்.
இதற்கு அந்த பெண் 'இல்ல நான் இப்பவே சொர்க்கம் போறேன் எதுக்கு நேரத்த வீணடிக்கனும்?" என்று கூறினாள்.
அவர் 'இது இங்க இருக்குற விதிமுறை, நீங்க இத பின்பற்றி தான் தீரனும்" என்று கூறினார்...
சரி, என்று அந்த பெண்ணும் முதலில் நரகம் சென்று ஒரு நாள் தங்க முடிவு பண்ணி அங்கு சென்றாள்.
ஆனால், அது நரகம் மாதிரியே இல்லை, அழகான பூங்காவாக இருந்தது. அங்கு அந்த பெண்ணிற்கு தோழிகள் நிறைய பேர் கிடைக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினார்கள்.
பிறகு சாத்தான் வந்தார், அந்த பெண் தன்னுடைய தோழிகளை அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நன்றாகவே பேசினார். அவர் பார்க்கவும் ரொம்ப அழகாக இருந்தார்.
அந்த பெண்ணிற்கு நரகத்தை விட்டு வரவே மனசில்லை.
ஒரு நாள் முடிந்து போக நரகமே இப்படி நன்றாக இருக்கே, சொர்க்கம் எப்படி இருக்கும்.
அங்கு சென்று பார்த்தால் யாரும் யாரோடும் பேசவே இல்லை. பூ பறிப்பதும், சாமி கும்பிடுவதுமாகவே இருந்தார்கள். இந்த பெண்ணிற்கோ பயங்கர சலிப்பாக இருந்தது.
கடைசியா எமதர்மன் வந்து 'நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கீங்க" என்று கேட்டார்.
அந்த பெண்ணோ 'நான் நரகத்துக்கே போகிறேன்... சொர்க்கத்தை விட நரகம் தான் நன்றாக இருந்தது" என்று கூறினாள்.
எமதர்மன் 'நல்லா யோசிச்சுக்கோங்க... போனா திரும்பி வரமுடியாது" என்று கூறினார்.
ஆனால் அந்த பெண்ணோ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பார்த்தால் அப்போது இருந்த அழகான பூங்கா மாதிரி இல்லாமல், பாலைவனமாகி அந்த பெண்ணின் தோழிகளோ கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டு இருந்தாங்களாம். சாத்தான் கூட கர்ண கொடூரமா சிரிச்சானாம்.
அந்த பெண்ணிற்கும் ஒன்றும் புரியவில்லை 'என்ன இது நேற்றை விட எல்லாமே மாறி இருக்கு" என்று கேட்டாள்.
அதற்கு அந்த சாத்தான், 'நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ... இன்னைக்கு நீங்க இங்க ஒரு எம்ப்ளாயி" என்று கூறினான்...
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக