Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 13 ஜூன், 2022

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி சிவகங்கை


இந்த கோயில் எங்கு உள்ளது?

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி என்னும் ஊரில் அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சிவகங்கையிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் வைரவன்பட்டி அமைந்துள்ளது. வைரவன்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலை கொண்டு அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் மூலவராக வைரவன் (பைரவர்) சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

வைரவன் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார்.

இத்தலத்திலுள்ள கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரு கை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார்.

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் இறைவி வடிவுடை அம்பாள் ஆவார்.

வேறென்ன சிறப்பு?

இத்தலத்தில் உள்ள அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள விநாயகர் வளரொளி விநாயகர் ஆவார்.

இத்தலமானது சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் சண்டிகேஸ்வரர் சன்னதி ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

எதிரி பயமும், கிரக தோஷங்களும் நீங்க இத்திருக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.

இத்திருக்கோயிலுக்கு வெளியே தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!