Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 டிசம்பர், 2023

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்

உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக பசை போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.

தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்

தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.

ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

விளக்கெண்ணெயுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக