>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 12 டிசம்பர், 2018

    தமிழரின் 'கள் பானம்' குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா?

    மதுபானங்களின் வருகைக்குப் பின் கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள். கள்ளும் ஒரு மதுபான வகைதான் என்றாலும் இது பழந்தமிழரின் பானம் ஆகும். மனித வரலாற்றில் இனக்குழுக்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல் பல்வேறு போதை பானங்களை பருகியுள்ளனர் என்பதை நமது வரலாறும், புராணங்களுமே எடுத்துரைக்கின்றன.


    ஔவையே குடித்தார்:
    இப்புவிப் பரப்பில் தமிழ் மொழியை பாடல்களால் வளர்த்த ஔவையார், அதியமானை ஒரு பாடலில் புகழ்ந்து எழுதும்போது, தனக்கு அதியமான் கள் பருகக் கொடுப்பான் என்றும், கள்ளை குடித்துவிட்டு தன்னிடம் பாடல் பாடச் சொல்லி அதை கேட்டு ரசிப்பான் என்றும் குறிப்பிடுகிறார்.


    பலமரக் கள்:
    தென்னை மரத்தில் மட்டுமல்ல, பனை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேப்பிலை மரம் என பல வகை மரங்களில் இருந்தும் கூட கள் இறக்கப்பட்டுள்ளது என்பதை சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன. இவ்வளவு ஏன், சப்பாத்திக்கள்ளியில் இருந்தும் கூட கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன மரங்கள் பலவும் சர்வதேச வணிகத்தின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடிகிறது அல்லவா? அவர்களிடம் இருந்து தப்பித்தது தென்னையும், வேம்பும் மட்டுமே.


    சித்த மருத்துவம்:
    தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.


    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

    1 கருத்து: