Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஜூன், 2019

வித்தியாசமான‌ புத்தகங்கள்




Image result for Codex Seraphinianus  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:


எத்தனையோ பிரபலமான புத்தகங்களைப் படித்திருப்போம். அல்லது புத்தகங்களைப் பற்றிப் படித்திருப்போம். ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் நூல்களெல்லாம் வித்தியாசமானவை. அது எப்படி என்பதை நீங்கள் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.
  1. த ஹேன்ட் தட் சைன்ட் த பேப்பர்
“அந்தக் காகிதத்தில் கையொப்பமிட்ட கை” என்று தமிழில் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நாவல். உக்ரேனில் பிறந்த, அந்த நாட்டு நாகரீகத்தைக் கொண்ட ஹெலன் டெமிடெங்கோ எனும் பெண் எழுத்தாளர் எழுதிய நாவல். நாசி களால் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பங்கு கொண்டவர் இந்த எழுத்தாளர்.
தனது தப்பிப் பிழைத்த அனுபவங்களையும், ஒரு படிப்பறிவற்ற டாக்சி டிரைவரான தந்தையின் நினைவுகளையும், பிழியப் பிழிய எழுதியிருந்த நாவல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விற்பனையில் பின்னிப் பெடலெடுத்தது.
பல்வேறு விருதுகளையும் அள்ளிக் கொண்டது. அதன் பின்னர் தான் இந்த நாவலாசிரியர் உக்ரேன் பாரம்பரியத்தைக் கொண்டவர் அல்ல என்பதும் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்தவர் என்பதும் அவரது உண்மையான பெயர் ஹெலர் டார்வில்லி என்பதும் தெரிய வந்தது. பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை அள்ளிய இந்த நூல் விருது வழங்கிய ஜாம்பவான்களை அவஸ்தைக்குள்ளாக்கி, மிகப்பெரிய விவாதத்தையும் உருவாக்கியது !
  1. மேலியஸ் மெலிஃபிகாரம்
1486ம் ஆண்டு வெளியான நூல் இது. ஹேமர் ஆஃப் விட்ச்கிராஃப்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது மாந்திரீகம் தொடர்பானது. இந்த புக்கைப் படித்தால் ஆவிகளைப் பிடிக்க முடியும், அவைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனும் பேச்சு எங்கும் பரவியது. இதனால் மக்கள் இந்த புத்தகத்தை விழுந்தடித்து வாசித்தனர்.
அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு இந்த நூல் பதிப்புக்கு மேல் பதிப்பு கண்டு எங்கும் நிரம்பியது. சாத்தானை வெளியேற்றவும், மந்திர தந்திரங்கள் செய்யவும் இந்த நூலை மக்கள் வாசிக்க ஆரம்பித்தனர். ஒரே புத்தகம் நாடுகளையே புரட்டிப் போட்டு எல்லோரையும் நிலைகுலைய வைத்ததென்றால் அது இந்த புத்தகம் தான்.
மந்திரவாதத்திலும் அது சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமுடையவர்கள் இதை ஒரு வெற்றிகரமான நூலாகப் பார்த்தார்கள். மாந்திரீகம், சாத்தான், கடவுள் எனும் மூன்று விஷயங்களையும் வைத்து இந்த நூல் நகர்கிறது. ஜெர்மனியில் வெளியாகி அந்த நாட்டையே சில நூற்றாண்டுகள் ஆக்கிரமித்திருந்த இந்த நூல் உண்மையிலேயே ஸ்பெஷல் தான்.
  1. வேம்பயர் அகாடமி
ஒரு நூல் வெளியானபின் அது சமூகத்தின் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்தால் அதைத் தடை செய்வது இயல்பு. ஆனால் ஒரு நூல் வெளியாகும் முன்பே அதைத் தடை செய்வது அபூர்வம். ஒரு நூல் அல்ல, அந்த நூலின் எந்தப் பாகமும் வரக் கூடாது என ஒட்டு மொத்தமாய்  தடைசெய்தது இந்த நூலுக்குத் தான்.
டுவைலைட் படம் பார்த்தீர்களெனில் இதன் கதை புரியும். ஒரு இளம் பெண் வேம்பயர்களை வீழ்த்துவது எப்படி என ஒருவரிடம் பயிற்சி எடுப்பார். அவர்கள் இருவரும் காதலில் விழுவார்கள். அந்த பயிற்சியாளரே இரத்தக் காட்டேறியாக இருப்பார். இப்படித் தான் போகும் கதை !
முதல் புத்தகம் வந்து சக்கை போடு போட்டது. எண்பது இலட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. 2009ம் ஆண்டு இதன் மூன்று பாகங்கள் வருவதாக இருந்தது. அதை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில அரசு தடை செய்தது. அதாவது நூல் எழுதத் துவங்கும் முன்பே அது தடை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டும் இதன் ஆறு பாகங்கள் வரவேண்டியது, ஆனால் தடை செய்யப்பட்டது. இப்படியே நூல் எழுதத் துவங்கும் முன்பே தடைசெய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது இந்த நூல்.
  1. பேபி அன்ட் சைல்ட் கேர்
குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு நூல் சுமார் 50,000 குழந்தைகளைப் பலிவாங்கியிருக்கிறது என நினைத்தாலே குலை நடுக்குகிறது இல்லையா ? அப்படி ஒரு தவறான அறிவுரையைக் கொடுத்து இந்த நூல் வரலாற்றில் ஒரு கறையாய் இடம்பிடித்திருக்கிறது.
1946ம் ஆண்டு வெளியான இந்த நூலில் ஒரு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை மல்லாக்க படுக்க வைத்தால் அவர்களுடைய வாந்தியோ, உமிழ்நீரோ தொண்டையில் சிக்கி குழந்தையைக் கொன்று விடும். எனவே குழந்தையை குப்புறப் படுக்க வையுங்கள். என்பது தான் அந்த அட்வைஸ்.
இந்த அட்வைஸை நம்பி பல பெற்றோர் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டனர் என்பது தான் துயரம். அப்படிப் படுக்க வைத்தால் முழந்தைக்கு முச்சுத் திணறல் வரும் என்பது தான் யதார்த்தம். அது தொன்னூறுகளில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதே போல‌ வேறு சில மிகத் தவறான அறிவுரைகளும் இந்த நூலில் இருக்கின்றன.
  1. யூரின் சிகிச்சை
தலைப்பை மறுபடியும் படிக்க வேண்டாம். சிறுநீர் சிகிச்சை தான் நூலின் தலைப்பு. உவ்வே என்பவர்கள் சட்டென அடுத்த தலைப்புக்கு தாவி விடுங்கள். இது பி.பி.பவர்ஸ் என்பவர் மிக சீரியசாக எழுதிய நூல்.
தனது வாழ்க்கையில் தனது சிறுநீரை மருந்தாகக் குடித்து வந்ததாய் ஆசிரியர் விளக்குகிறார். அது என்னென்ன நோய்களைக் குணமாக்கும் என்பதையும், நீண்டகால நோய்கள் வராமல் எப்படித் தடுக்கும் என்பதையும் அவர் விலாவரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறுநீர் மருத்துவம் புதிதல்ல. பழங்காலம் தொட்டே அது பழக்கத்தில் உள்ளது தான். காலில் கல் இடித்து விட்டால் அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உள்ளது. “சிறுநீர் மருத்துவம் ரொம்ப நல்லது” என மொரார்ஜி தேசாய் 1978ல் பேசியிருந்தார் !
  1. கேட்ஸ்பி
இது ஒரு நாவல். எழுதியவர் எர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர். இந்த நாவலில் 50,000 வார்த்தைகளுக்கு மேல் உண்டு. 1939ம் ஆண்டு வெளியான இந்த நாவல் சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட ஒரு நாவல். இதில் என்ன ஸ்பெஷல் என்று தானே நினைக்கிறீர்கள் ? இந்த நாவலில் “இ” எனும் ஆங்கில உயிரெழுத்து பயன்படுத்தப்படவேயில்லை.
ஆங்கில உயிரெழுத்துகள் இல்லாமல் வார்த்தைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி இருக்கும் போது ஒரு நாவலையே இவ்வளவு பெரிதாக, சுவாரஸ்யமாக ஒருவர் எழுதியிருக்கிறார் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதல்லவா ?
  1. ஹௌ டு ஷார்ப்பன் பென்சில்ஸ்
பென்சிலை சீவுவது எப்படி ? ஒரு எல்.கே.ஜி பையன் இதற்கு பதில் தருவான். அல்லது ஒரு ஷார்ப்னரை எடுத்து நம்மிடம் தருவான். ஆனால் எப்படி பென்சிலைச் சீவுவது என்பதை ஒருவர் மிக சீரியசாக யோசித்து ஒரு முழு நூலையே எழுதியிருக்கிறார்.
இதுக்கெல்லாமா புக் எழுதுவாங்க ? என வியக்க வைத்த நூல் இது எனலாம். ஒரு உடைந்த பென்சிலோடு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தால் அது ஏகப்பட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறது.
நகைச்சுவையாகவும், தகவல்களின் குவியலாகவும், சுவாரஸ்யமான நுட்பங்களாலும் நிரப்பியிருக்கும் இந்த நூல் ஒரு ஆச்சரியம்.
8 கில்லர்
ஒரு கொலைகாரனின் கதை தான் இந்த நூல். இதில் விசேஷம் என்னவென்றால் இதை எழுதியதே அந்தக் கொலைகாரன் தான் !
கார்ல் பேன்ஸ்ராம், 1891 ல் பிறந்தவர், அமெரிக்காவையே உலுக்கிய சீரியல் கில்லர். இவர் செய்த கொலைகள் இருபத்து ஒன்று. பாலியல் பலாத்காரங்கள் ஆயிரத்துக்கும் மேல். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், பல முறை தப்பி ஓடினார். தொடர்ந்து கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தார். 1930ல் மரண தண்டனை பெற்று இறந்தார்.
ஹென்றி லெஸர் எனும் ஜெயிலர் இவர் மீது பரிதாபம் கொன்டார். எனவே அவரிடம் தனது வாழ்க்கை வரலாறை கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி கொடுத்தார் கொலைகாரர். சிறைகள் மாறிய போதும், தொடர்ந்து கடிதங்கள் எழுதி தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையெல்லாம்  வெளிப்படுத்தினார்.
1928ம் ஆண்டு முதல் அவர் கடிதங்களை எழுதினாலும், கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு நூலாக கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, 40 ஆண்டுகள் !!
  1. எ டிரிட்டைஸ் ஆஃப் ஹியூமன் நேச்சர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரிய அறிவாளி. சிந்தனையில் உலகையே வியக்க வைத்தவர். அவரைப்பற்றி வந்த நூல்களை அடுக்கி வைக்கவே பல நூலகங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு மனிதரைப் புரட்டிப் போட்ட புத்தகம் ஒன்று உண்டு. அது தான் A Treatise Of Human Nature
ன் எனும் புத்தகம். மனித இயல்பு குறித்த உளவியல் ஆய்வு தான் இந்த நூல்.
இந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ள பெரிய நூல். படித்தால் தலைசுற்றக்கூடிய அளவில் சிக்கலான இந்த நூலை எழுதியவர் டேவிட் ஹியூம் என்பவர். 1738ல் வெளியான இந்த நூலை ஐன்ஸ்டீன் முழுமையாக வாசித்து சிலாகித்திருக்கிறார். இந்த நூலைப்பற்றி பலமுறை வியந்து பேசியிருக்கிறார்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகப் பிரசித்தம். அந்த சிந்தனையை முழுமைப்படுத்த அவருக்கு உதவியதே இந்த நூல் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
கோடக்ஸ் செராபினியனஸ் எனும் இந்த
  1.  கோடக்ஸ் செராபினியனஸ்
நூல் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டது. யாருக்குமே புரியாத ஒரு மொழி, யாராலும் புரிந்து கொள்ள முடியாத படங்கள் என இந்த நூலே ஒரு புதிர்களின் புதையல் தான்.
லூகி செராபினி என்பவர் இரண்டு ஆண்டுகள் எழுதிய இந்த நூல் 360 பக்கங்கள் கொண்டது. மனிதர்கள் விலங்குகளாக உருமாறும் விசித்திர கற்பனை நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.
இது ஒரு கற்பனை உலகம் குறித்த ஆசிரியரின் பார்வை என்பவர்களும் உண்டு, இது ஏலியன் குறித்தது என்பாரும் உண்டு. எது எப்படியோ, யாரும் இது என்னவென்பதை சரியாகச் சொல்லவில்லை என்பது தான் உண்மை. எழுதிய ஆசிரியர் உட்பட.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக