>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 17 ஜூலை, 2019

    கண்களுக்கு விருந்து அளிக்கும்... கல்வராயன் மலை...

    Image result for கல்வராயன் மலை...

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    கல்வராயன் மலை விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 122கி.மீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 46கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 289கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    சிறப்புகள் :

    பச்சை கம்பளம் போர்த்தியது போல் பச்சை பசேல் போன்று காட்சியளிக்கும் அழகிய மலை.

    சாலையில் பயணிக்கும்போது சாலையின் ஓரத்தில் இருக்கும் அழகிய வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து.

    கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலைவாசத்தலம் என அழைக்கின்றனர்.

    கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப்பகுதி 'சின்னக் கல்வராயன்" மற்றும் தெற்குப்பகுதி 'பெரிய கல்வராயன்" என்று குறிப்பிடப்படுகின்றது.

    இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது.

    இங்குள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும், குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்பமாட்டார்கள்.

    ஏனென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைக்கப்பட்டு படகு குளம் உருவாகியுள்ளது.

    இங்கு காட்டுப்பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளை பார்க்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கிறது. மலையின் மீது செல்லச் செல்ல சந்தன மரம், தேக்கு மரம் போன்றவற்றை காண முடியும்.

    எப்படி செல்வது?

    சின்ன சேலத்திலிருந்தும், கள்ளக்குறிச்சியிலிருந்தும் பேருந்துகளின் மூலம் கல்வராயன் மலைக்கு பயணம் செய்யலாம்.

    விமானம் வழியாக :

    சென்னை விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    விழுப்புரம் ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    மழைக்காலங்களில் சென்றால் அருவிகளில் குளித்து மகிழலாம்.

    எங்கு தங்குவது?

    விழுப்புரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    கோமுகி அணை.
    மேகம் அருவி.
    பெரியார் அருவி.
    தாவரவியல் பூங்கா.
    வெங்கட்ரமணா கோவில்.
    1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகம்மன் கோவில்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    செஞ்சி கோட்டை.
    செஞ்சி மதிற்சுவர்.
    வேணுகோபால் சுவாமி கோவில்.
    புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில்.
    24 தீர்த்தங்கரர்கள்.
    மேல்நாரியப்பனூர் தேவாலயம்.
    உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக