>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 31 ஜூலை, 2019

    பமுக்காலே வெந்நீரூற்றுகள் !!

     Image result for பமுக்காலே வெந்நீரூற்றுக்கள் !!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    இந்த இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை வாரி வழங்கிகொண்டுதான் இருக்கிறது. அதில் பல வியக்கத்தக்கதாகவும், அதிசயக்கதக்கதாகவும் விளங்குகின்றது.

    இயற்கையின் அருங்கொடையாக உலகுக்கு வழங்கப்பட்ட அற்புதப் படைப்புக்களுள் ஒன்று வெந்நீரூற்றுக்கள்.

    நீர் என்றாலே அது இந்த இயற்கை நமக்கு கொடுத்த பெரும் கொடை. சாதாரணமாக பூமிக்கடியிலிருந்து வரும் நீரின் வெப்பநிலை என்னவாக இருக்கும். அந்தந்த இடங்களின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப நீரின் வெப்பநிலையானது இருக்கும்.

    ஆனால், நாம் இங்கு காண இருக்கும் வெந்நீரூற்றின் வெப்பநிலை நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த வெந்நீரூற்றுகளால் நோய்கள் கூட குணமாகுமாம்.

    எங்கு இருக்கிறது இந்த வெந்நீரூற்று?

    பமுக்காலே  வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டினிசிலி  மாகாணத்தில் அமைந்துள்ளன.

    உலகிலேயே இது ஒன்றுதான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது. இது யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வெந்நீரூற்று 2700 மீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும் கொண்டது.

    இதிலிருந்து வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கால்சியம் கார்பனேட் அதிகளவு கொண்டிருக்கிறது.

    எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 டிகிரியிலிருந்து 100 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும்.

    இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் கனிம படிவுப்பாறைகள் (செடிமெண்ட்டரி பாறைகள்) உருவாகின்றன.

    இப்பாறைகள் பார்ப்பதற்குப் பனிக்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். ஏதோ ஒரு பனிப்பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.

    வானத்தில் இருக்கும் மேகக்கூட்டங்கள் போல மிகவும் அழகாக காட்சியளிக்கும். இந்த இடத்தை பஞ்சுக் கோட்டை என்றும் கூட அழைக்கின்றனர்.

    நோய்களை குணமாக்கும் வல்லமை :

    இந்த வெந்நீரூற்றுகள் 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகுமாம்.

    இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டச் சிக்கல்கள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வாத நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், செரிமானச் சிக்கல் குறைபாடுகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு இருக்கிறதாம்.

    ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

    இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும், மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால், இவ்வீதியில் மோட்டார் ஊர்திகள் (தானுந்துகள்) செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.

    இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பமுக்காலே வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உங்களுக்கும் துருக்கி செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீர்கள்!!


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

     





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக