Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கஷ்டத்தை ஏற்றுக்கொள்வோம்..!

 Image result for கஷ்டத்தை ஏற்றுக்கொள்வோம்..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே இருந்தன. அந்த பாறைகள் பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெயிலில் வாடிக் கிடந்தது. அதை நினைத்தால் அந்த கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. நாம் எப்போதுதான் இங்கிருந்து நகர்வோமோ? என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டிற்கு பக்கத்தில் ஒரு நகரம் இருந்தது. அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள். புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அதனால், அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டிற்குள் வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். பிறகு மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்து, இந்தப் பாறைகள் இரண்டும் சரியான அளவில் இருக்கிறமாதிரி தெரிகிறது. நாளைக்கு இந்த கற்களை ஆட்களை வைத்து தூக்கிக் கொண்டு செல்லலாம் என்று கூறினார்.

சிற்பிகள் திரும்பி சென்றபிறகு முதல் பாறை, ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்திற்குப் போறோம்! என்றது. உடனே இரண்டாவது பாறை கோபமாக அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தை சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா? என்றது.

அதற்கு முதல் பாறை, அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்? என்றது. நான் வலியைப் பொறுத்துக் கொள்வேன். பிரச்சனையில்லை! என்றது. ஆனால் இரண்டாவது பாறை மட்டும், என்னால அது முடியாது! என்று தீர்மானமாகச் சொன்னது. நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாக போய் விடுவேன்.

அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது என்று கூறிவிட்டது. மறுநாள் அந்த சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை. பிறகு அவர்களில் ஒருவர், சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும் என்று கூறினார். பிறகு அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

கஷ்டத்தை தாங்கிக்கொண்டு இருந்ததால், இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது பாறை இன்னும் காட்டிற்குள்தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக