இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முருக நாயனார் 63 நாயன்மார்களில்
ஒருவர். “முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என திருத்தொண்டத் தொகை
இவரைப் பற்றிக் கூறுகிறது.
சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர்
மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன்
திருவடிக்கீழ் ஊனமின்றி நிறை அன்பால் உருகும் மனத்தார். நாள் தோறும்
விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ
எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற்
கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல்
எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அக்கால
பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத்
திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும்,
திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது
பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சில நாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று
வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு
சுவாமிகள் புகலூருக்கு வந்த பொழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர் கொள்ளும்
புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும்
(ஞானசம்மந்தர்) சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய
பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்
முருக நாயனார்.
திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு
நண்பராகும் பெருமை பெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த
திருமண விழாவிற் கலந்து கொண்டு அங்கு ஈசன் தோற்றுவித்த முக்தி ஒளியில் அல்லது
ஜோதியில் புகுந்து மோக்ஷம் பெற்றார். இதுவே முருக நாயனார் வரலாறு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக