>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

    பூ பூக்கும், ஆனால் காயாக மாறாத அதிசய மரம் கொண்ட அபூர்வ கோவில்!



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


     பலரும் அறியாத, தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு அரிய அதிசயங்கள் ஒவ்வொரு கோவில்களிலும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதில் இன்று மூலவர் சந்தனத் திருமேனியாய் இருந்து அருள்பாலிக்கும் அபூர்வத் திருத்தலம் கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோவிலில் நிகழும் அதிசயத்தைப் பார்ப்போம்....!
    திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் இருக்கிறது இந்த கருங்குளம் திருத்தலம். இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது.

     இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து 18கிமீ தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

     திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியே நவதிருப்பதி கோவில்கள் உள்ளன. இந்த நவதிருப்பதி கோவில்களுக்கும், இந்த கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது.

     எவ்வாறென்றால், நாம் நவதிருப்பதி கோவில்களை தரிசனம் செய்வதற்கு முன்னால் இந்த வெங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், எல்லா நவதிருப்பதி கோவில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    இந்த ஆலயமானது கருங்குளம் மலையின் மேல் இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோவில் கற்பக்ரஹ சுவாமி சந்தனக் கட்டையால் ஆனவர். இத்தல இறைவன் இரண்டு சந்தனக் கட்டைகளால் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     இக்கோவில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை. அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இந்த மரத்தில் புளியம்பூ பூக்குமே தவிர அது புளியங்காயாக மாறாது.

    இக்கோவில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக