Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

சாமை, கீரை சூப்

Image result for சாமை கீரை சூப்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



தேவையான பொருள்கள்:
  • உருளைக் கிழங்கு ஒன்று 
  • வெங்காயம் ஒன்று 
  • கீரை ஒரு கப்
  • சாமை அரை கப்
  • பூண்டு ஐந்து பல்
  • சீரகம் கால் ஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் நான்கு ஸ்பூன்
  • மிளகுத் தூள் தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு 

செய்முறை:
  • உருளைக் கிழங்கை நன்றாகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.                                                                                                                                    
  • பூண்டுப் பற்களையும், வெங்காயத்தையும் கூட பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • (உங்களுக்கு பிடித்த) கீரையை ஆய்ந்து, மண் நீக்கிக் கழுவி, நறுக்கி ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே போல கொத்தமல்லியையும் மண் நீக்கி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சாமையை ஊற வைத்துப் பின் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் தண்ணீரை வடித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகிய இவற்றைப் பொன்னிறம் வரும் வரையில் நன்கு வறுக்கவும்.
  • மேற்கண்டவை பாதி வதங்கிய மாத்திரத்தில் நறுக்கி வைத்த உருளைக் கிழங்கு, கீரை ஆகிய இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • இப்போது முக்கால் வாசி வெந்த மாத்திரத்தில் தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • பின்னர் நன்கு கிண்டி தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்த சாமையை இதனுடன் கலந்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
  • பின்னர் மேற்கண்டவற்றில் இருந்து ஒரு பாதி பங்கை மட்டும் எடுத்து மிக்சியில் சிறிது ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பாதியை ஏற்கனவே அடுப்பில் கொதித்துக் கொண்டு இருக்கும் பாதியுடன் கலந்து விடவும்.
  • பின்னர் இறக்கி வைத்து மிளகுத் தூள், கொத்தமல்லி ஆகிய இவற்றை மேலே தூவி அருந்தவும்.
  • இதோ இப்போது சுவையான சாமை, கீரை சூப் தயார்.
  • கண் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாமை, கீரை சூப்பை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக