Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 அக்டோபர், 2019

அறிவுடையோர்..!

Image result for அறிவுடையோர்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அறியாமல் அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். அங்கு இருக்கும் ஒரு அரக்கன் கோபமடைந்து, அவரைப் பார்த்து யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா? என்றான்.

தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்! என்றார். இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை! என்று அந்த அரக்கன் கூறிவிட்டு, அடுத்த கணம், அந்தக் அறிஞரை குரங்காக மாற்றிவிட்டான்.

அவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் சாப்பிட்டார். பிறகு அவர் ஒரு நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பக்கத்து பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

குரங்கை வெளியே அனுப்புங்கள் இல்லை கொன்றுவிடுங்கள்! என்று கத்தினார்கள். ஆனால், கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டு, வேண்டாம் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

அந்தக் குரங்கு கப்பலின் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. அவர்கள் செல்லும் நகருக்குள் ஒரு செய்தி பரவி இருந்தது. அங்கு அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்! என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார்.

குரங்கும் நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்? என்றனர். அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வியான, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்காக இருக்காது. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள்.

அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை இளவரசி படித்துள்ளார். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்து அறிஞரை பழைய நிலைக்கு கொண்டுவந்தார். பிறகு அவர் இளவரசிக்கு நன்றியுடன் இருந்தார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

நீதி :

அறிவுடையோர் எந்த உருவத்தில் இருந்தாலும் மதிக்கப்படுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக