>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 30 நவம்பர், 2019

    முடிக்கு கலரிங் செய்யணும்னா வீட்லயே செய்யலாம்.. எப்படி என்ன பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கங்க...

      


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Join Our Telegram Channel

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     
    கலர் கலராய் உடைகள் மட்டும்தான் அணிய முடியுமா என்ன.. கூந்தலையும் கலராக்கி காண்பிக்க முடியும் என்கிறார்கள் அழகு யுவதிகள். அதன் பயனாகத்தான் இன்று பலரது தலைமுடியும் பச் சை, ஆரஞ்சு, சிவப்பு, செந்நிறம் என்று கலர் கலராய் மின்னுகிறது. வழக்கம் போல் கெமிக்கலால் நிறம்மாறும் தலைமுடி. ஆனால் கொஞ்சம் கவனமாக கையாண்டால் இயற்கை வழியிலேயே கலரிங் செய்து கொள்ளவும் முடியும். எப்படி என்பதை தெரிந்துகொள்வோமா?
    ஹேர் கலரிங்
    தலை அலங்காரம் என்பதே அலங்காரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூந்தல் பராமரிப்பு என்பது கூந்தல் உதிர்வு முதல் வளர்ச்சி வரை மட்டும் அல்லாமல் கூந்தல் அலங்காரம் வரை எடுத்துகொள்ளலாம்.
    முடி ஸ்ட்ரெய்னிங், முடி ஸ்மூத்தினிங், முடி கர்லிங் என்று பல விதமான ஆங்கிளில் செதுக்கப்படும் முடியின் வழியில் ஹேர்கலரிங் இணைந்துள்ளது. இப்போது வாரத்துக்கும், மாதத்துக்கும் என்று நினைத்த நேரத்தில் நினைத்த கலரை மாற்றிக்கொண்டு வலம் வருவதுதான் இன்றைய ஃபேஷ னாக இருக்கிறது. இதில் இராசயனம் கலந்த கலரிங் என்பது அடிக்கடி செய்யும் போது ஆபத் தை உண்டாக்கவும் செய்யும்.
    ஆபத்தும் காரணமும்
    ஹேர் கலரிங்கை எப்போதாவது செய்து கொள்வது எந்த விதமான பாதிப்பையும் உண்டாக்காது. ஆனால் அடிக்கடி செய்யும் போது முடிகள் வலுவிழக்க கூடும். முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும். முடி வளர்ச்சியையும் தடுக்கும்.
    அதிலுள்ள கெமிக்கல் முடியின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அந்த க்ரீம்கள் சருமத்துக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. அதிலும் நிரந்தர கலரிங்கை விட ஆபத்தானது அவ்வபோது மாறி மாறி வேறு வேறு கலர்களில் செய்யப்படும் ஹேர் கலரிங். இந்த பாதிப்பு இல்லாமல் வெறும் காய்கறிகளைக் கொண்டும் முடிக்கு சாயம் ஏற்றலாம். இது அழகையும் ஆரோக்கியத்தையும் எப்போதும் பாதிக்கா து. அதிலும் அதிக செலவில்லாமல் எப்படி என்பதை பார்க்கலாமா?
    பீட்ரூட் கலரிங்
    பீட்ரூட்டில் கலரா என்கிறீர்களா ஆமாம் குறிப்பாக இளநரை வந்தவர்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.
    பீட்ரூட்- 1
    நெல்லிக்காய்- 4
    தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
    நெல்லிக்காயை கொட்டை நீக்கி வையுங்கள். பீட்ரூட்டை தோல் நீக்கி நறுக்கி வையுங்கள். மிக்ஸி யில் நெல்லிக்காய், பீட்ரூட் துண்டுகளை சேர்த்து மைய அரைத்து பிறகு தேங்காய் எண்ணெய் கல ந்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள்.
    பிறகு பத்து நிமிடங்கள் கழித்து டை பிரஷ் கொண்டு தலையின் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவுங்கள். 20 நிமிடங்கள் வரை தலையை காயவிடுங்கள். பகல் பொழுதில் சூரிய ஒளி படும்படி இருந்தால் பீட்ரூட் சாயம் நன்றாக பிடிக்கும். பிறகு ரசாயனம் கலக்காத ஷாம்பூவால் தலையை மென்மையாக அலசுங்கள். தொடர்ந்து வாரம் ஒரு முறை இதைப்பயன்படுத்தும் போது இளநரை மறையும். இரண்டாவது முறையிலேயே முடியின் நிறம் சிவப்பாக மாறும். இயற்கையான இந்த முறை எந்தவிதமான பக்கவிளைவையும் உண்டாக்காது.
    கேரட் கலரிங்
    கேரட் பார்க்கவே அழகாக இருக்கும். அதன் நிறம் கண்ணை பறிக்கும். சத்துள்ள கேரட்டின் சாறு உடலுக்கு மட்டுமல்ல கூந்தல் முடிக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.
    தேவை
    கேரட் சாறு- அரை கப்
    கேரட்டில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.
    மாதுளைச் சாறு- 1 தேக்கரண்டி
    மருதாணிப்பொடி- 1 தேக்கரண்டி
    க்ரீன் டீ டிகாஷன் - 1 தேக்கரண்டி
    தேங்காய் எண்ணெய்- அரை டீஸ்பூன்
    அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கூந்தல் முழுவதும் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு கூந்தலை அலசி னால் கூந்தல் செந்நிறமாக மாறி இருக்கும். கூடவே பளபளப்பும் கூடி இருக்கும்.
    இயற்கை கலரிங் எளிய குறிப்பு
     இந்த இயற்கை கலரிங்கை மாதம் ஒரு முறை பயன்படுத்தலாம். பீட்ரூட் சாறை வாரம் ஒரு முறை கூட பயன்படுத்தலாம். இளநரை தெரிகிறது என்று நினைப்பவர்கள் பீட்ரூட்டை அரைத்து இலேசாக நீர்தெளித்து ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு விட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். வெளியில் செல்லும் போது தலை சீவியதும் பீட்ரூட் ஸ்ப்ரேவை அடித்து விட்டு செல்லுங்கள்.இதனால் இளநரை தெரி யாது. மாறாக நிறமும் செந்நிறமாய் மின்னும்.
    இந்த இயற்கை கலரிங்கில் நீங்கள் எதிர்பார்க்கும் பளபளப்பு குறைவு என்றாலும் அழகான நிறத் தை ஆபத்தின்றி பெறலாம். அழகு அவசியம் தான். அதை விட ஆரோக்கியம் அவசியமாயிற்றே.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக