Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 14 நவம்பர், 2019

பழிச் சொல்..!

 Image result for பழிச் சொல்..!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


புதுப்பட்டி என்ற ஊரில் கந்தசாமி என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினார். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின்பு, வீட்டிற்கு வந்ததும் கந்தசாமியின் மனசாட்சி அவரை உறுத்தியது.
 கிராமவாசி மீது வீணாக பழி சொன்னதை எண்ணி வருந்தினார். அதனால் தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் இருக்கிறதா என்று யோசித்தார்.
 அவருக்கு என்ன பிராயச்சித்தம் செய்வதென்று புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்று, நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனதை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு ஒரு வழி கூறுங்கள்! என்று கேட்டார்.
 அதைக்கேட்ட துறவி சிறிதுநேரம் யோசித்துவிட்டு, இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துக்கொண்டு அந்த கிராமவாசியின் வீட்டின் முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு!. நாளை வந்து என்னைப் பார்! என்று கூறினார்.
 கந்தசாமியும் பஞ்சைக் கொண்டு சென்று அந்த கிராமவாசியின் வீட்டின் முன்பு பரப்பி விட்டார். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்து, துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா? என்று கேட்டார்.
 உடனே துறவி, கந்தசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் சென்று, அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் எடுத்துக்கொண்டு வா! என்று கூறினார்.
 கந்தசாமி மிகுந்த ஆவலுடன் கிராமவாசியின் வீட்டிற்கு சென்றார். ஆனால், அங்கு ஒரு விரல் அளவு பஞ்சு கூட இல்லை. எல்லாம் காற்றில் பறந்து சென்றிருந்தது. அதைக் கண்ட கந்தசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
 துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சு கூட இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது? என்று கேட்டான்.
 உடனே, துறவி சிரித்துவிட்டு, கந்தசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதேபோல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும், அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திரும்பி வர முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி பெற முடியாது. நீ மனம் திருந்தி இறைவனிடம் உன் தவறுக்காக மன்னிப்பு கேள் என்று கூறினார்.
 கந்தசாமிக்கு இப்போது உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டார்.
 நீதி :
 பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!