Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

துண்டிக்கப்பட்ட மொபைல் நம்பர் பட்டியலை வெளியிட உத்தரவு!

 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சேவை துண்டிக்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

அழைப்பு, எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டுமல்லாமல் தனிநபரின் அடையாளமாகவே மொபைல் எண்கள் தற்போது மாறிவிட்டன. வங்கிக் கணக்கு, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் அடையாளம் சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் மொபைல் எண்கள் மாற்றப்பட்டு வேறு நெட்வொர்க்குக்கு மாறும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களில் மொபைல் எண்களையும் மாற்ற வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அவ்வாறு மாற்றத் தவறுகின்றனர். கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட மொபைல் எண்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. வங்கிக் கணக்கிலும் மொபைல் எண்கள் இணைப்பு முக்கியமானதாக உள்ளது. கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நபர்களைத் தொடர்புகொள்ள மொபைல் எண்கள் உதவியாக இருக்கின்றன. வழக்கமான வங்கிச் சேவைகளுக்கும் மொபைல் எண்கள் பயன்படுகின்றன.

எனவே, துண்டிக்கப்படும் மொபைல் எண்கள் குறித்த விவரங்களை முறையாகக் கையாளவும், அவற்றுக்கு மாற்றாக வாங்கப்படும் எண்கள் குறித்த விவரங்களை அப்டேட்டாக வைத்திருக்கவும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களின் துண்டிக்கப்பட்ட மொபைல் எண்கள் அடங்கிய பட்டியலை ஒவ்வொரு மாதமும் டிராயிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

துண்டிக்கப்படும் மொபைல் எண்கள் குறித்த பட்டியல் டிராய் இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். இதன் மூலம் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள் மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படுவதும் எளிதாக இருக்கும். இது நெட்வொர்க் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மொபைல் எண்கள் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் அதிகாரப்பூர்வமாகத் துண்டிப்பு செய்யப்படும். அல்லது, நீண்ட காலமாக மொபைல் எண் செயல்படாமல் முடங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனமே அந்த எண்ணைத் துண்டித்துவிடும். அதே எண்ணில் மற்றொரு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண் தரப்படும். இந்த வழிமுறைகளை எளிதாக்கவும் டிராய் தற்போது துண்டிக்கப்பட்ட மொபைல் எண்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து வழங்க உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக