
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இவர் பெயர் பரேல் துரோவ், இவர்
தான் பிரபல டெலிகிராம் ஆப்பின் (Telegram App) நிறுவனர் ஆவார். டெலிகிராம் என்பதும்
வாட்ஸ்அப் போன்றதொரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் தான் என்பதையும், டெலிகிராம் ஆப் தான்
தற்போது வரையிலாக வாட்ஸ்அப்பிற்கு இருக்கும் சரிக்கு சமமான போட்டியாளர் என்பதையும்
உங்களில் சிலர் அறிந்திருக்கலாம்.
யார் இவர்? இந்த எச்சரிக்கையை நாம் ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும்?
என்ன
போட்டியாளரா? அப்போது வாட்ஸ்அப்பை டெலிட் செய்ய சொல்லாமல் இன்ஸ்டால் செய்யவா
சொல்வார்? என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும் வாட்ஸ்அப்பை டெலிட் செய்ய அவர்
முன்னெடுத்து வைக்கும் காரணம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்
நாம் அனைவருமே நிச்சயமாக வாட்ஸ்அப்பை டெலிட் செய்யப்போவதில்லை, குறைந்தபட்சம்
அதிலிருக்கும் ஆபத்து என்ன என்பதையாவது அறிந்து கொள்வோமே!
ஒருநாள் உங்கள் புகைப்படங்கள் பொதுத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்படும்!
பரேல்
துரோவ் இப்படி பதிவு செய்கிறார்: மக்கள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை ஒரு பொருட்டாக
எடுத்துக்கொள்வதை பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப்பை டெலிட் செய்ய வேண்டிய அவசியம்
இல்லை. மாறாக உங்கள் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் ஒரு நாள்
பொதுத்தளத்தில் பகிரங்கமாக கூடாது என்றால், உங்கள் போனில் இருந்து நீங்கள்
வாட்ஸ்அப்பை நீக்க வேண்டும்" என்று துரோவ் தனது டெலிகிராம் சேனல் வழியாக
பதிவிட்டுள்ளார். துரோவ்வை மொத்தம் 335,000 பேர் பின்தொடர்பவர்கிறார்கள் என்பதும்
இங்கே குறிப்பிடத்தக்கது.
துரோவ் கூறுவது உண்மையா?
பேஸ்புக்கிற்கு
சொந்தமான வாட்ஸ்அப் கடந்த சில காலங்களாக ஸ்னூப்பிங் குற்றசாட்டுகளில் (எதையாவது
கண்டுபிடிக்க முயற்சிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒருவரின் தனிப்பட்ட
விவகாரங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் குற்றச்சாட்டுகளில்) சிக்க தவிக்கிறது.
அதாவது வாட்ஸ்ஆப் ஆனது Trojan horse ஆக பயன்படுத்தப்பட்டு பயனர்களின்
நான்-வாட்ஸ்அப் கண்டென்ட்களை, அதாவது பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமித்து
வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் போன்ற தகவல்கள் ஆனது உளவு பார்க்கப்படுவதாக
கூறப்படுகிறது.இந்த காரணத்தினால் தான் டெலிகிராம் நிறுவனர் வாட்ஸ்அப்பை டெலிட்
செய்யுமாறு பரிந்துரைக்கிறார்.
டெலிகாரம் vs வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப்பில்
மொத்தம் 1.6 பில்லியன் அளவிலான உலகளாவிய பயனர்கள் உள்ளனர், மறுகையில் உள்ள
டெலிகிராம் ஆனது உலகளவில் 200 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. டெலிகிராமில்
மிகவும் குறைந்த அளவிலான பயனர்கள் மட்டுமே உள்ளதால், அவ்வப்போது வாட்ஸ்அப்பில்
நிகழும் ஹேக்ஸ் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் போன்ற சிக்கல்களை டெலிகாரம் ஆப்
சந்திப்பதில்லை. ஆகவே, வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லாதது என்று சுட்டிக்காட்டி, தனது
வணிக ரீதியான கருத்தியல் போட்டியை துரோவ் கட்டவிழ்த்து விட்டுள்ளதில் எந்த
ஆச்சரியமும் இல்லை, யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவற
மாட்டார்கள்!
பரேல் துரோவ் சொல்வது உண்மைதான்! இதோ சமீபத்திய எடுத்துக்காட்டு!சமீபத்தில் வாட்ஸ்அப் வழியாக தீங்கு விளைவிக்கும் எம்பி4 கோப்பு பரவி வருவதாகவும், அது வாட்ஸ்அப் ஸ்னூப்பிங்கிற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட MP4 கோப்பு ஆகும் என்றும், இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு சாதனங்களிலும் காணப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமான தகவல் வெளியானதையும், இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க விரும்பும் பயனர்கள் உடனடியாக வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும் வாட்ஸ்அப் பரிந்துரைத்து என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
யாரெல்லாம் உடனே அப்டேட் செய்ய வேண்டும்?
கூறப்படும்
எம்பி4 Vulnerability ஆனது 2.19.274 க்கு முந்தைய Android பதிப்புகள் மற்றும்
2.19.100 க்கு முந்தைய iOS பதிப்புகளில் காணப்பட்டுள்ளது. அதேபோல 2.25.3 க்கு
முந்தைய Enterprise Client பதிப்புகள்; 2.19.104 க்கு முந்தைய பிசினஸ் Android
பதிப்புகள்; 2.19.100 க்கு முந்தைய பிசினஸ் iOS பதிப்புகள் மற்றும் 2.18.368 க்கு
முந்தைய விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் பதிப்புகளில் காணப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக