Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

உண்மையான வாழ்க்கை..!


Image result for உண்மையான வாழ்க்கை..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, என்னை காப்பாற்று, காப்பாற்று என்று ஓர் அலறல் சத்தம் அவனுக்கு கேட்டது. ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறியது.

உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். நான் உன்னை காப்பாற்ற மாட்டேன் என சிறுவன் மறுத்து விட்டான். ஆனால் முதலை, நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று என்று கண்ணீர் விட்டது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலை முதலை பிடித்துக் கொண்டது. பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி கெட்டதனத்தை, இதுதான் உலகம் என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்து இதுதான் உலகமா? என்று கேட்டான். அதற்கு பறவைகள், நாங்கள் மரத்தின் உச்சியில் பாதுகாப்பாக எத்தனையோ முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம் என்று கூறியது.

உடனே அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகப்படியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான் என்று கூறியது.

அடுத்து ஆடுகளை கேட்கிறான். எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான் என கூறியது. கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

சிறு முயலே உனக்கு என்ன தெரியும்? என்று முதலை சொல்ல, நீ பேசுவது சரியாக புரியவில்லை தெளிவாக பேசு என்றது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்று முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை உன்னால் வீழ்த்தி விடமுடியும் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

அந்த சமயத்தில் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே! ஓடிவிடு என்று கூறியது. அந்த சிறுவனும் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை என்று முயல் முதலையிடம் கூறியது.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்த போது, அவர்கள் அந்த முதலையை கொன்றுவிடுகின்றனர். சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது. உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அதனால் அந்த நாயை கல்லெடுத்து எறிந்து விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்ப வைத்து விட்டது. முன்னுக்குப்பின் முரணாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள் தான் வாழ்க்கை!.

நீதி :
வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக