Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

சுவையான... காய்கறி இட்லி... இதை ட்ரை பண்ணி பாருங்க...!!

Image result for சுவையான... காய்கறி இட்லி... இதை ட்ரை பண்ணி பாருங்க...!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சர்க்கரை நோயாளிகளுக்கான சிறுதானிய காய்கறி இட்லி!!

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது இந்த சிறுதானிய காய்கறி இட்லி எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வரகு, சாமை - தலா 2 கப் (சிறுதானிய குருணை)

திணை, குதிரைவாலி - தலா 2 கப் (சிறுதானிய குருணை)

பயத்தம் பருப்பு - 1 கப்

உளுந்தம் பருப்பு - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பீன்ஸ் - 15

பச்சைமிளகாய் - 5

கேரட் - 3

பட்டாணி - 1 கப்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வரகு, சாமை, திணை, குதிரைவாலி ஆகிய சிறுதானிய குருணைகளை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் கேரட்டை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லித்தழை, பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த சிறுதானிய குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுத்தால், சத்து நிறைந்த சிறுதானிய காய்கறி இட்லி தயார்! இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக