• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

தொடரும் தாக்குதல்கள்... சைபர் போருக்குத் தயாராகிறது இந்தியா! #CyberAttack

ஊர்க்கோடாங்கி செவ்வாய், நவம்பர் 19, 2019
ஒருங்கிணைந்த சைபர் பாதுகாப்பு மையம் 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


டிஜிட்டல்தான் எல்லாம் என மாறிவரும் இந்த உலகில் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன செய்யப்போகிறது இந்தியா?
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இப்படி நாட்டின் பாதுகாப்புக்கு சைபர் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, இந்தியாவில் இருக்கும் அனைத்து சைபர் பாதுகாப்பு பிரச்னைகளைக் கண்காணிக்கவும் தாக்குதல்களைத் தடுக்கவும் முதன்மையான ஒரு தனி அதிகார மையம் உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 12-க்கும் மேற்பட்ட சைபர் பாதுகாப்பு நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இந்த அமைப்புகள் அனைத்தும் இந்தியாவின் சைபர் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது இந்நிறுவனங்கள் அனைத்துக்கும் தனித்தனி கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து முறையாகச் செயல்படுத்தவே இந்த முயற்சியை அரசு மேற்கொள்ள இருக்கிறது.

தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம், தேசியப் பாதுகாப்பு செயலகம் (national security council Secretariat), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (national technical research organization) மற்றும் இதர பல துறைகளும் நிறுவனங்களும் பிரேத்யக சைபர் அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் சைபர் தாக்குதல்களும் ஊடுருவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிகழ வாய்ப்புண்டு.
இவற்றோடு தனி அமைப்புகளாக கணினி அவரசகால செயல் குழு (computer emergency response team, CERT), நாட்டின் முக்கிய தகவல்களை நிர்வகிக்கும் கட்டமைப்பு (national critical information infrastructure ), தேசிய சைபர் ஒருங்கிணைப்பாளர் மையம் (national cyber coordinator centre) ஆகியவையும் உள்ளன. நாளுக்கு நாள் இப்படியான சைபர் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
உதாரணத்துக்கு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் 'சைகார்டு' என்னும் மையத்தை (cyber cooperation centre, cycord) உளவுத்துறை தொடங்கியுள்ளது. இது சைபர் உலகில் ஒரு தற்காப்பு கருவியாகவும் ஹேக்கிங்கிலும் ஆன்லைன் விசாரணைகளிலும் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் இருக்கும். ஏற்கெனவே இந்தத் துறையின் கீழ்தான் தேசிய சைபர் க்ரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (national cybercrime analytics unit -tau), கூட்டு சைபர் குழுவிற்கென தனி மேடை, தேசிய சைபர் க்ரைம் தடயவியல் ஆய்வகம் (national cybercrime forensic laboratory) மற்றும் சைபர் க்ரைம் சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவு ஆகியவை உள்ளன.
வடகொரியா போன்ற நாடுகள் ரகசியமாக ஹேக்கர் குழுக்களை வளர்த்தெடுத்து வருகின்றன. இதனால் சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் அது பெரும் பின்னடைவாக இருந்துவிடும்.
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான லியூட்னன்ட் ஜென்ரல் ராஜேஷ் பன்ட்டின் இப்போதைய முதன்மையான பணியாக இருப்பது, அனைத்து சைபர் பாதுகாப்பு நிறுவனங்களின் திறன்களை ஒன்றிணைத்துச் செயல்பட வைப்பதே. மேலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் தேசியப் பாதுகாப்பு கழக செயலகத்தில் நடைபெற்று வருகின்றன எனவும் உயர்ரக கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் திட்டம் தீட்டப்பட்டது எனவும் சைபர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக 2013-ல்தான் தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை அறிவிக்கப்பட்டது. தற்போது 2020-ல் வரவிருக்கும் சைபர் பாதுகாப்புக் கொள்கையில் சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் அதன் தேவை என்ன என்பதும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தக் கொள்கை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டம் ஒன்றை அரசுக்குப் பரிந்துரை செய்யக்கூடும். இந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டியதாக இருக்கும்.
இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் இன்னொரு மூத்த அதிகாரி ஊடகம் ஒன்றில் பேசுகையில், "இப்படி மறுசீரமைக்கப்படவிருக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இப்போதுள்ள பாராளுமன்ற அமைப்பில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்கவும் அமல்படுத்தவும் அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் துறையால் மட்டுமே முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
ஏற்கெனவே உலக நாடுகளில் சைபர் கட்டமைப்புகள் ஒருங்கிணைந்த வகையிலே செயல்படுகின்றன. உதாரணத்துக்கு இங்கிலாந்தில் தகவல் தொடர்பு தலைமையகம்தான் சைபர் பாதுகாப்பு பற்றிய அனைத்துக்கும் பொறுப்பாக இருக்கிறது. அதேபோல் சைபர் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் அனைத்தையும் நேரடியாக பிரதமரிடமே சமர்ப்பிக்கிறது சிங்கப்பூரின் சைபர் பாதுகாப்பு நிறுவனம். அமெரிக்காவின் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம்தான் அந்நாட்டின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தும் அமைப்பாக உள்ளது.
இந்தியாவில் சைபர் தாக்குதல்களும் ஊடுருவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிகழ வாய்ப்புண்டு. சைபர் போருக்குப் பல நாடுகளும் தயாராக உள்ளன. வடகொரியா போன்ற நாடுகள் ரகசியமாக ஹேக்கர் குழுக்களை வளர்த்தெடுத்து வருகின்றன. இதனால் சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் அது பெரும் பின்னடைவாக இருந்துவிடும். எனவே, இந்தியா போன்ற வளர்ந்த நாடு சைபர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றே!
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • திரௌபதியின் பிரார்த்தனை, காப்பாற்றும் கண்ணன்...!
      க ர்ணன், அடிமைகளாகிவிட்ட இந்தப் பாண்டவர்கள் உனக்கு எஜமானர்கள் அல்ல. திருதராஷ்டிர புத்திரர்களே எஜமானர்கள் எனக் கூறினான். அதன் பிறகு துரிய...
  • பிரம்மிக்க வைக்கும் பிரமிடுகள் !!
    பிரம்மிக்க வைக்கும் பிரமிடுகள் !!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்த...
  • உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய...
  • 12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
  • சர்வதேச அளவில் தலைமைப் பதிவிக்கான விருத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!
        இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந...
  • கராசே ஏரி ஒரு மணிநேரம் நின்றாலே உயிரைப் பறிக்கும்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொ...
  • திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல... வள்ளுவர் கோட்டம்...!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள...
  • புனித வெள்ளி -மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் வழிபாடு
    புனித வெள்ளி -மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் வழிபாடு
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினை...
  • 11-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நவகிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவி...
  • 🌞 19-01-2026 – தினசரி தமிழ் பஞ்சாங்கம் & ராசிபலன் 🌞
    🌞 19-01-2026 – தினசரி தமிழ் பஞ்சாங்கம் & ராசிபலன் 🌞
    ━━━━━━━━━━━━━━━━━━ 📅 தேதி : 19-01-2026 | தை 05 🗓️ நாள் : திங்கள்கிழமை 🔱 தமிழ் ஆண்டு : ஸ்ரீ விஸ்வாவசு 🌞 அயனம் : உத்தராயணம் 🍂...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி