Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 டிசம்பர், 2019

இதில் தவறு யார் மேல்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


இது சிரிக்க மட்டுமே...!!

மாலினி : எங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போயிருச்சு?
கலா : என்னடி சொல்ற?
மாலினி : அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
கலா : 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சேர்ந்தே இருப்பீங்க...
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா? ஜோதிடரே...!
ஜோதிடர் : 😅😅
-------------------------------------------------------------------------------------------------------------

விமலா : ரேஷன் கடையில வேலை பாக்குறவர கல்யாணம் பண்ணிக்கிட்டியே லைஃப் எப்படி போகுது?
கமலா : அதை ஏன் கேக்குற? எப்ப பாத்தாலும் எடையை குறை, எடையை குறைன்னு சொல்லிக்கிட்டே இருக்காரு.
விமலா : 😛😛
-------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க மாமியாருக்கு கால்ல எப்போ முள் குத்துச்சு?
மருமகள் : ஆறுமாசம் ஆச்சு டாக்டர்.
டாக்டர் : உடனே வந்திருந்தா முள்ளை எடுத்திருக்கலாமே? இப்போ புண்ணாயிருச்சே.
மருமகள் : பரவாயில்லை டாக்டர்... கால்-ஐ எடுத்துடுங்க.
டாக்டர் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------

அருண் : என்னதான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது.
குமார் : ஏன்?
அருண் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!!
குமார் : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பொருள் :

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும். அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
-------------------------------------------------------------------------------------------------------------

தவறு யார் மேல்...?
நாம் சென்ற இடத்தில் மரியாதை
கொடுக்கவில்லை என்று சொல்வது தவறு...

மரியாதை இல்லாத இடத்திற்கு
நாம் சென்றதுதான் தவறு...

யோசித்து பார்த்தால் தவறு அதிகம்
நம் மேல்தான் இருக்கும்.

பொன்மொழிகள்..!!
🌟 வெற்றி என்பது உன் நிழல் போல,
நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்.

🌟 உலகம் உன்னை அறிவதை விட,
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்.

🌟 உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள்.
பறக்க கற்றுக் கொள்ளுங்கள்.
உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

🌟 நாள் முழுவதும் கணத்திற்கு கணம்,
நேர்மையாய், துணிவாய், உண்மையாய், உழைக்கிறவனின்
கரங்களே அழகிய கரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக