Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 டிசம்பர், 2019

நன்றி மறந்த சிங்கம்..

 Image result for நன்றி மறந்த சிங்கம்..
 ஒரு காட்டில் விறகு வெட்டுவதற்காக ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. அதைக் கேட்டதும் அவர் பயத்துடன் ஓடத் தொடங்கினார். அப்போது மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கி அவர் சென்றார். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைபட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு, நான் உனக்குப் பல உதவிகளை செய்வேன், என்றது. ஆனால், அவர் நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்? என்று கேட்டார். அதற்கு சிங்கம், மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத் திறந்துவிடு, உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்று சிங்கம் நைசாகப் பேசியது.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பி அவர் கூண்டின் கதவைத் திறந்தார். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட அவர், சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே, அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி! என்று கேட்டார். என் உயிரை காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்றது சிங்கம். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்று கூறினார். அப்போது அந்த வழியாக ஒரு நரி வந்தது. இதனிடம் நியாயம் கேட்போம் என்று நரியிடம் நடந்தவற்றையெல்லாம் கூறினார்.

அதற்கு சிங்கம், எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்த செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே! என்று கேட்டது. அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பாற்றி சிங்கத்தை கூண்டில் பூட்டிவிட தந்திரமாக செயல்பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து, நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள் என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது. நான் அந்த கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன். எந்த கூண்டிற்குள்? என்று நரி கேட்டது. அதோ இருக்கிறதே அந்த கூண்டிற்குள் என்றது சிங்கம். எப்படி அடைந்து கிடந்தீர்கள்? என்று நரி கேட்டது. சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது. நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே! என்று சிங்கம் கத்தியது. அதற்கு நரி நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இவரைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்கு சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் இவரை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்! என்று கூறியது. நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக