Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மகர ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்

 Image result for மகர ராசி ஆங்கில வருட ராசிபலன்கள்
ப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும்... மகர ராசி அன்பர்களே...!!

மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.
உங்கள் ராசி அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் இந்த தருவாயில் இந்த புது வருடமானது துவங்க இருக்கின்றது. எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும்.

புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தடைபட்டு கொண்டிருந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழல் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

போட்டி பந்தயங்களில் ஈடுபடும்போது சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
அரசியல்வாதிகளுக்கு :

கட்சி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் சாதகமாக இருக்கும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பலரின் பாராட்டுகளையும், சிலநேரங்களில் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.
விவசாயிகளுக்கு :

மனை தொடர்பான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். விவசாயத்தை சார்ந்து இருப்பவர்களுக்கு இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மேலும் அதற்கான முயற்சிகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும்.
மாணவர்களுக்கு :

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் குருமார்களின் ஆலோசனை படி செயல்படுவதன் மூலம் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இயலும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு கவனக்குறைவினால் சிறுசிறு வாய்ப்புகள் தவறுவதற்கான சூழல்கள் இருப்பதினால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு மனதில் பலவிதமான எண்ணங்களும், குழப்பமான சூழ்நிலைகளும் உண்டாகும். நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொள்வதன் மூலம் செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு :

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளில் கோபங்களை வெளிப்படுத்தாமல் அமைதியாக செயல்படுவதன் மூலம் உங்களின் செல்வாக்கு மற்றும் தனவரவு மேம்படும்.
பரிகாரம் :

திங்கட்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக