Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

பறக்கும், ஆனால் பறந்து செல்லாது... கண்டுபிடிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! இது சிரிக்க மட்டுமே...!!


அருண் : அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
பாபு : வேறென்ன புற்று நோயாம்.
அருண் : 😄😄
-------------------------------------------------------------------------------------------------------------
சேகர் : உங்க பையன் இவ்வளவு முன்னால வந்ததுக்கு நீங்க ஊக்குவித்ததுதான் காரணம்.
குமார் : நான் ஊக்கெல்லாம் விக்கிறதில்லீங்க... பரம்பரை, பரம்பரையா பாக்கு விக்கிறதுதாங்க நம்ப வியாபாரம்.
சேகர் : 😐😐
-------------------------------------------------------------------------------------------------------------
தீபக் : நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா?
டாக்டர் : யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கிறது?
தீபக் : 😌😌
-------------------------------------------------------------------------------------------------------------
ராமு : முதலாளி மணி 9 ஆச்சு கடைய சாத்தலாமா?
சோமு : எதுக்கும் சாத்துறதுக்கு முன்னாடி அந்த புடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கோங்க.
ராமு : 😆😆
-------------------------------------------------------------------------------------------------------------

பாண்டி : ரொம்ப வெயில் தாங்க முடியலன்னா என்ன செய்வீங்க?
குமார் : போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.
பாண்டி : அப்பயும் முடியலன்னா?
குமார் : ஏசியை ஆன் பண்ணுவேன்.
பாண்டி : 😩😩
-------------------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள் :

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
-------------------------------------------------------------------------------------------------------------
பொன்மொழிகள் !!
🌟 நீ பிறக்கும்போது உன்னை அறிந்தவர்கள் உன் உறவினர்களாக இருக்கலாம்.
ஆனால் நீ இறக்கும்போது உலகமே உன்னை அறிந்தவனாய் நீ இருக்க வேண்டும்.

🌟 தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை.
விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

🌟 சக மனிதனுக்கு தொண்டு செய்பவன், கடவுளுக்கு தொண்டு செய்தவன் ஆகிறான். தனக்குள் இருக்கும் கடவுளை தரிசிக்கும் பேறும் பெறுகிறான்.

🌟 எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.

விடுகதைகள்..!!
👉 பறக்கும், ஆனால் பறந்து செல்லாது. அது என்ன? - கொடி.

👉 ஊசி போட்டால் சுற்றிச் சுழன்று பாடும். அது என்ன? - இசைத்தட்டு.

👉 எட்டாத உயரத்தில் எண்ணாயிரம் காவலர்கள். அது என்ன? - நட்சத்திரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக