Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 டிசம்பர், 2019

இது உண்மை அல்லவா? - ரிலாக்ஸ் ப்ளீஸ் !!



சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

இங்கிலீஷ்காரர் : What is This?
கடைக்காரர் : This is தயிர்.
இங்கிலீஷ்காரர் : What is  தயிர்?
கடைக்காரர் : Milk sleep at night Morning become tight
யார்கிட்ட நாங்களும் இங்கிலீஷ் பேசுவோம்ல...
இங்கிலீஷ்காரர் : 😑😑
-------------------------------------------------------------------------------------------------------
போலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
சீனு : வெளியில விலைவாசி ஏறிப்போச்சு.. வயிறார சாப்பிட முடியல.. அதான் சார்...
போலீஸ் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------

மனைவி : என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன் : என்னம்மா விஷயம்?
மனைவி : நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் இறந்துட்டாராம்.
கணவன் : செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒன்னு இருக்குல..
மனைவி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------


ஆசிரியர் : பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக்கூடாது, பிறர் மனம் நோகப் பேசக்கூடாது.
மாணவன் : இந்த உலகத்திலேயே வாழக்கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
ஆசிரியர் : 😐😐
-------------------------------------------------------------------------------------------------------

அருண் : சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிஞ்சுட்டேன்...?
குரு : அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?
அருண் : நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க...
குரு : 😂😂
-------------------------------------------------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?
⭐ சிரிக்க மறந்தவன் சிரமப்படுவான். சீக்கிரம் எழுபவன் சிகரத்தைத் தொடுவான்.

⭐ அச்சத்துக்கு மருந்தில்லை.

⭐ மனிதன் என்ன சொல்கிறான் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.
-------------------------------------------------------------------------------------------------------

இது உண்மை அல்லவா?
👉 பிச்சை போடுவது கூட சுயநலமே...
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

👉 அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் கூட உணர வைக்க முடியாது.
வாழ்க்கைத் தத்துவங்கள்...!
🌟 நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்கு, நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

🌟 எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.

🌟 மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால், வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
-------------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள் :

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக