பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு
முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
NRC நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் உங்கள் குடியுரிமையினை நீங்கள்
எவ்வாறு நிரூபிக்க முடியும்? என்பதை இந்த பதிவு கூறுகிறது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம்
மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில்
போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது தேசிய
அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த
முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும்
அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து
மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள்
பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம்
முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். இந்த வெட்டு தேதி
அசாமுக்கு மட்டுமே. அசாமின் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வழக்கு
முற்றிலும் வேறுபட்டது. அங்கு பின்பற்றப்பட்ட நடைமுறை அசாம் ஒப்பந்தம் மற்றும்
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் இருந்தது.
குடியுரிமை (குடிமக்களின் பதிவு
மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் சிக்கல்கள்) விதிகள் -2003-ன் படி நாடு முழுவதும்
செய்யப்பட வேண்டிய உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)-ன் செயல்முறை
வேறுபட்டதாக இருக்கும்.
உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு
(NRC)-ன் போது, ஒரு நபர்
கல்வியறிவற்றவராக இருந்தால், எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றால், அவர் / அவள்
ஒரு சாட்சி மூலம் தனது அடையாளத்தை நிரூபிக்க முடியும். சமூக சரிபார்ப்பு போன்ற பிற
ஆதாரங்களின் மூலம் தன்னை அடையாளம் காணும் வாய்ப்பையும் அதிகாரிகள் அவருக்கு
வழங்குவார்கள்.
இது மட்டுமல்லாமல், நாடு முழுவதும்
உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறைப்படுத்தப்படும் போதெல்லாம், அது
மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பொருந்தாது. மதத்தின் அடிப்படையில் யாரும்
உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)-யிலிருந்து விலக்கப்பட மாட்டார்கள். பிறந்த
தேதி மற்றும் இடம் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிப்பதன் மூலம் மட்டுமே
குடியுரிமையை நிரூபிக்க முடியும்.
ஆக உங்கள் குடியுரிமையை நிரூபிக்க
உங்களிடம் உங்களைப் பற்றிய எந்த ஆதாரமும் இல்லையென்றால், பெற்றோரின் பிறப்பு
விவரங்களை அளிப்பதன் மூலம் உங்களு குடியுரிமையினை நிரூபிக்க இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக