Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

படிங்க... சிரிங்க... சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

கொஞ்சம் சிரிக்கலாமே !!
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள். இதுவரைக்கும் நான் பாக்காத இடத்துக்கு கூட்டிட்டு போங்க....
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு கிச்சன்க்கு போகலாம்...
மனைவி : 😠😠
--------------------------------------------------------------------------------------------------
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போற?
மனைவி : அவங்கள பாத்தா உங்க அம்மா மாதிரியே இருக்காங்க, அதான்!
கணவன் : 😏😏
--------------------------------------------------------------------------------------------------
மனைவி : வர வர எனக்கு இந்த நகை, புடவை மேல இருக்குற ஆசையே விட்டுப் போயிருச்சுங்க.
கணவன் : நிஜமாவா சொல்ற?
மனைவி : ஆமாங்க, எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகை, பழைய புடவையவே கட்டிகிட்டு இருக்குறது.....
கணவன் : 😧😧
--------------------------------------------------------------------------------------------------
மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.
கணவன் : எனக்கு மறந்து போச்சு.
மனைவி : இத கூடவா மறப்பீங்க?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கும்.
மனைவி : 😮😮
--------------------------------------------------------------------------------------------------

சிந்திக்க வேண்டிய தத்துவங்கள் !!
புகை வண்டி என்னதான் வேகமா போனாலும்
வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!

வாயால நாய்-னு சொல்ல முடியும்
ஆனால், நாயால வாய்-னு சொல்ல முடியுமா?

விஷம் பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது.
ஆனால், பாயாசம் 10 நாள் ஆனா விஷம் ஆயிடும்!!

அரிசி கொட்டுனா, வேற அரிசி வாங்கலாம்,
பால் கொட்டுனா, வேற பால் வாங்கலாம்.
ஆனால், தேள் கொட்டுனா? வேற தேள் வாங்க முடியுமா?

யானை மேல நீங்க உட்காந்தா ஜாலி...
ஆனால், யானை உங்க மேல உட்காந்தா, நீங்க காலி!!

என்ன தான் ஏணி மேல ஏற உதவினாலும்,
அது எப்போதும் கீழதான் இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------

இப்படியும் ஓர் போர்வீரனா?
ஒரு போர் நடந்து முடிந்து போர் வீரர்கள் தங்கள் வீரப் தீரப் பிரதாபங்களைச் சொல்லி, மக்களை வியக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு சென்ற பாபுவும் தன் பங்கிற்கு தான் செய்த வீரச் செயல்களை சொல்ல ஆரம்பித்தார்.

நானும் ஒரு முறை ஒரு போரில் கலந்து கொண்டு ஒரு போர் வீரனின் இரண்டு கைகளையும் வெட்டிச் சாய்த்தேன்.

பொதுவாக யுத்தத்தில் தலையைத் தானே வெட்டுவது வழக்கம்? தாங்கள் ஏன் தலையை விட்டுவிட்டு கைகளை வெட்டினீர்கள்? என்று கேட்டான் ஒரு சிறுவன்.

நான் தலையைத்தான் வெட்டியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு முன்பே யாரோ தலையை வெட்டியிருந்தார்களே? அதனால்தான் கைகளை வெட்டினேன் என்றார் பாபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக