Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

தூக்கில் போட ரூல்ஸ் இதுதான்; நிர்பயா வழக்கில் கயிறு உடன் ரெடியான ஹேங்மேன்!

 


நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது.
நாட்டையே உலுக்கிய சம்பவம் 2012 டிசம்பரில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை. அதன்பிறகு 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்காக மீரட் சிறையில் இருந்து பவன் ஜாலத் என்ற ஹேங்மேன் திகார் சிறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவருக்கு சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இவரே நாளை காலை 6 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கில் போடவுள்ளார்.

முன்னதாக திகார் சிறையில் இருந்து மூன்று அதிகாரிகள் மீரட் சென்று ஜாலத்தை அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் மீரட் சிறையில் இருந்து கிளம்புவதற்கு முன்பு தனது சக பணியாளர்களிடம் “ஜெய்ஹிந்த்” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை போன்ற எடை, உயரம் கொண்ட பொம்மைகள் உருவாக்கப்பட்டு அந்த டம்மிகளை இன்று தூக்கில் போட்டு ஒத்திகை பார்க்க உள்ளனர்.

இதையொட்டி பெய்ஜே பேண்ட், மரூன் ஷர்ட், கருப்பு நிற ஜாக்கெட் உடன் முழுவதுமாக ஷேவ் செய்து கொண்டு திகார் சிறைக்கு ஜாலத் சென்றுள்ளார். திகார் சிறை விதிமுறைகளின் படி குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக மட்டுமே தூக்கில் போடப்படுவர்.

 அனைவரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போட விதிமுறைகள் அனுமதிக்காது. இதுதொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனைகளை சிறைத்துறை அதிகாரிகள் பெற்று வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் தூக்கில் போடப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!