Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

வளர்பிறையில் நீர் பொங்கியும், தேய் பிறையில் குறையும் அதிசய கிணறு கொண்ட திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில்





 நீர் பொங்கி, குறையும் அதிசய சந்திர கிணறு - குளித்தால் எல்லா நோய்களும் பறந்துவிடுமாம்... திருமாந்துறை அட்சயநாதசுவாமி திருக்கோயிலின் வரலாறு, புராண கதை இங்கு பார்ப்போம்...

திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில் தகவல்

மூலவர்: அட்சயநாதசுவாமி
தாயார்: யோகநாயகி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்: வைகாசி விசாக திருவிழா
பழமை :பன்னிரண்டாம் நூற்றாண்டு
அமைந்துள்ள இடம்: தஞ்சாவூர் , திருமாந்துறை

தல சிறப்புகள்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது திருமாந்துறை, யோக நாயகி அம்பாள் சமேத அட்சயநாத சுவாமி திருக்கோயில். இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமா முனிவரும், நவகிரகங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாகப் புராணக்கதை தெரிவிக்கின்றது.

இந்த சந்திர கிணறு வளர்பிறையில் பொங்குவது, தேய்பிறையில் கிணறு நீர் குறையும் அதிசய நிகழ்வு நடக்கின்றது.

கோயிலின் அமைப்பு:

இந்த கோயிலின் மூலவராக அட்சயநாதசுவாமி, யோகநாயகி அம்பாள் அருள்பாளிக்கின்றனர். மேலும் விநாயகர், முருகன், மகாலெட்சுமி, மகாவிஷ்ணு, நால்வர், அரதத்தர், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன.
மேலும் இந்த கோயிலுக்குள் ஒரு குளமும் உள்ளது. கோயில் மூன்று நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் கொண்டுள்ளது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலை பரம்பரையாக அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

கோயில் வரலாறு:

கும்பகோணம், திருமாந்துறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீ அக்ஷய நாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. செம்பியன்மாதேவியரால் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு இந்த கோயில் சொந்தமானது.

தல புராணம் நடத்திர கோயில்:

விருச்சிக ராசியில் வரும் ரோகிணி நட்சத்தினருக்கும், விருச்சிக ராசியினருக்கும் உரிய பரிகார ஸ்தலமாகும்.
முன்னொரு காலத்தில் காலமா முனிவருக்கும், நவகிரகங்களுக்கும் தொழு நோய் ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய சிவபெருமானை வேண்டினார். அவர் கூறிய அறிவுரைப்படிதிருமாந்துறை வெள்ளெறுக்குக் காட்டில் பூஜைசெய்து, இந்த கோயிலில் அமைந்துள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் 15 தினங்கள் நீராடி, தங்கள் உடல் ரோகத்திலிருந்து விடுபட்டு, மனக்குறையை தீர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக இந்த கோயில் ரோகிணி நட்சத்திரத்தினருக்கு உரிய கோயிலாக பார்க்கப்படுகின்றது.

சூரியனார் கோயில்


இந்த கோயில் அமைந்துள்ள அரை கி.மீ தொலைவில் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. காலமா முனிவரும், நவகிரகங்களும் இந்த சூரியனார் கோயிலில் தங்கியிருந்து, திருமாந்துறை ஸ்ரீ அட்சயநாதரைத் தரிசித்து தங்களின் உடல் ரோகத்திலிருந்து நீங்கியதாக புராணங்கள் சொல்கின்றன.
இதன் காரணமாக தற்போதும் திருமாந்துறை ஸ்ரீ அட்சயநாதரைத் தரிசித்த பின்னரே சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

சந்திர கிணறு அதிசயம்:

இந்த கோயிலுக்குள் அரை சந்திர அதாவது பிறை வடிவில் சந்திர தீர்த்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வளர்பிறை நாட்களில் தண்ணீர் அதிகரிப்பதும், தேய்பிறை நாட்களில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக குறைவதுமான அதிசயம் பல காலமாக நடைபெற்று வருகின்றது.

பொங்கிய சந்திர கிணறு:

 வளர்பிறையில் பொங்குவதும், தேய்பிறையில் குறைவதும் சாதாரணம். அந்த வகையில் அமாவாசை தினத்தில் கிணற்றில் குறைந்த அளவு நீர் இருப்பது வழக்கம்.
ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக கடந்த 2018 டிசம்பர் 6ஆம் தேதி அமாவாசை தினத்தில் திடீரென குறைந்த அளவு நீர் காணப்பட வேண்டிய கிணற்றில் நீர் பொங்கி வந்தது.
கங்கையே அட்சயநாதரை தரிசிக்க, பொதுவாக நீர் அதிகரிக்கும் நாளில் வராமல், மிக குறைவாக இருக்க வேண்டிய நாளில் பொங்கி வந்து, அன்றைய தினம் கோயில் முழுவதும் நீரால் சூழ்ந்தது.

சந்திர தீர்த்தம்

இதனை அறிந்த உள்ளூர் மக்கள், சுற்றியுள்ள ஊரை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு குவிந்து நீராடினர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீராடியும் நீர் குறையாமல் பொங்கிக் கொண்டே தான் இருந்தது என்றால் எல்லாம் ஈசனின் செயல் என்பது உண்மை தான்.
இதனை கேள்விப்பட்ட திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சந்திர தீர்த்தத்தில் நீராடி, அட்சயநாதரை வழிபாடு நடத்தினார்.
இதே போல் ஒவ்வொரு வருடமும் சந்திர தீர்த்தம் பொங்கி வருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!