Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஜனவரி, 2020

மருத்துவக் கழிவுகளுடன் சீனக்கப்பல் சென்னை வருகை... கொரோனா அபாயமா?

சீனக்கப்பல் மருத்துவக்கழிவுகளுடன் சென்னை வந்திருக்கிறது. இது சூழலியல் ஆர்வர்லர்கள் பலரின் குற்றாசாட்டை உறுதி செய்வதுடன், சூழலியல் அபாயமாக அமையவும் வாய்ப்புள்ளது.

உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாயகமான சீனாவிலிருந்து ஆட்கள் வந்தாலே, அனுமதிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிடிருக்கும் சூழ்நிலையில், சீனாவிலிருந்து மருத்துவக்கழிவுகளுடன் கப்பலே வந்திருப்பது பெரும் அதிச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குள் இந்த கப்பல் கொண்டு வரும் கழிவுகளால் என்னென்ன விபரீதங்கள் நேருமோ என்று அதிலும் குறிப்பாக சென்னை துறைமுகத்துக்கு வந்திருக்கும் இந்த கப்பலால் மேலும் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தக் கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், இதனை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம் சீனாவின் குப்பைகளை மலேசியாவில் கொட்டுவதற்கு மலேசிய அரசு கடுமையாகத் தடை விதித்து, சீனக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியது.

இதுகுறித்து பேசிய மலேசியாவின் அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் யோ பீயென், “நாங்கள் என்ன வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியா? இனி மலேசியாவின் பக்கம் உங்கள் கண்டெய்னர்கள் வந்தால் கப்பலுடன் அவை திருப்பி அனுப்பப்படும். இந்த விடயத்தில் கருணை எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.” என்று படுகாட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து , சீனா பல மூன்றாம் உலக நாடுகளில் சட்டவிரோதமாக தன் நாட்டுக் கழிவுகளை கொட்டி வருவதாக குற்றச்சாட்டுகளை ஆங்காங்கே இருக்கும் சூழலியல் ஆர்வலர்கள் முன்வைத்து வந்த நிலையில், தற்போது சீனக்கப்பல் மருத்துவக்கழிவுகளுடன் சென்னை வந்திருக்கிறது.

இது சூழலியல் ஆர்வர்லர்கள் பலரின் குற்றச்சாட்டை உறுதி செய்வதுடன், சூழலியல் அபாயமாக அமையவும் வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அபாயமும் இருப்பதால் இந்த பிரச்சினை தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இதுகுறித்து கேட்டபோது “ஏற்கனவே இந்தியாவில் மருத்துவக் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதில் ஏராளம் கேள்விகள் இருக்கும் நிலையில், இந்தக் கப்பல் விவகாரம் அடுத்த தலைவலியாக இருந்துவிடக்கூடாது” என்கிறார் சூழலியல் ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரபாகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!