Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

6 மாதமாக சிகிச்சை அளித்த மருத்துவர் – கட்டைப் பிரித்த போது அதிர்ச்சி !

 
கால்முறிவுக்காக தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்ற நபர் கட்டைப் பிரித்த போது அதிர்ச்சியாகியுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்த ஒருவர் மூலமாக அதே ஊரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சென்று சேர்ந்துள்ளார். ஆனால் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவரேதான் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்.
ஆனால் 6 மாத சிகிச்சைக்குப் பிறகும் அவரது காலில் எந்த முன்னேற்றமும் இல்லை. கட்டைப் பிரித்து பார்த்தபோது காலில் சீழ் பிடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் மீண்டும் அரசு மருத்துவமனையிலேயே சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக