>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

    இது என்ன புதுசா இருக்கு?...🤔🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!


    சிரிக்க மட்டுமே !!

    ஆண் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
    பெண் : நன்றி.
    ஆண் : உங்க தங்கச்சி  உங்கள விட அழகா இருக்காங்க.
    பெண் : போடா எரும...😡😡
    ஆண் : அது உங்க ரெண்டு பேரையும் விட அழகா இருக்கு.
    பெண் : 😩😩
    -------------------------------------------------------------------------------------------------------------
    முதலாளி : வேலைக்கு தினமும் அரைமணி, முக்கால் மணி நேரம் லேட்டாவே வரீங்களே... ஏன்?
    தொழிலாளர் : 'நீங்கதான் வேலை-ன்னு வந்துட்டா டைம் பாக்கக்கூடாது-ன்னு சொன்னீங்க".
    முதலாளி : 😰😰
    -------------------------------------------------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!

    💪 அடுத்தவர் தும்மலில் சகுனம் பார்க்கிற நாம்தான் தமக்கு வேண்டியவரின் தும்மலில் நூறு, இருநூறு என ஆயுளை கூட்டி சொல்கிறோம்.

    💪 ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்திற்காகத்தான் எனும்போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

    💪 சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.

    💪 சமூகம் மலடி என அழைப்பவளையும், அம்மா என்று அன்போடு அழைக்கிறான் பிச்சைக்காரன்.

    💪 இயற்கையை அழித்த மனித இனம், தன் சாவுக்கு இயற்கை மரணம் என போட்டுக்கொள்வது விசித்திரமாக இருக்கிறது.

    💪 நம்மாலேயே காக்க முடியாத ரகசியத்தை இன்னொருவர் காப்பார் என எப்படி நம்புகிறோம்?
    -------------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.

    பொருள் :

    யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக