Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

கொரோனாவை எதிர்க்கும் டிவிஎஸ்: ரூ.30 கோடி நிதியுதவி!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரையில் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அரசு தரப்பிலிருந்து தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில் துறை தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ரூ.30 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. சுந்தரம் கிளைடான் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது. கொரோனா போன்ற கொடூர வியாதியை எதிர்த்துப் போராட நம் அனைவரின் ஆதரவும் தேவை என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவரான வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சத்தால் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகளுக்கும் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1.7 லட்சம் கோடி சலுகை மிக முக்கியமான அறிவிப்பு என்று டேஃப் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத் துறையினரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!