Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 மார்ச், 2020

பிடிச்சவங்ககிட்ட கூட “சாரி” சொல்ல பிடிக்காதா?... அதையே வேறு எப்படிலாம் சொல்லலாம்...

samayam tamil
உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு 'மன்னிக்கவும்' (சாரி) என்ற வார்த்தையை சொல்ல தயங்குபவரா நீங்கள்? ஆம் என்றால்....நீங்கள் செய்ய வேண்டியது இவைகள் தான்.மனித உறவுகளை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் ஆழமாகவும் வெறித்தனமாகவும் காதலிக்கும்போது சண்டைகள் என்பது எந்தவொரு உறவிலும் தவிர்க்க முடியாத பகுதியாகும்.

கருத்து வேறுபாடுகள் மற்றும் வாதங்கள் எப்போதும் அந்த உறவினை அழிக்கும் தன்மையோ அல்லது சிக்கல்களைக் குறிக்கவில்லை; மாறாக சண்டை என்பது தம்பதிகளுக்கு தங்களது உண்மையான உணர்ச்சிகளைவெளிப்படுத்த உதவுகிறது.இருப்பினும், ஒரு தவறான திருப்பத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தி கொள்வதில் இருந்து காப்பது. 

அந்த சண்டையை நிறுத்துவது தான், கணவன் மனைவி எவ்வளவு அழகாக சண்டையை முடித்துக் கொள்கிறார்கள் மற்றும் சிக்கல்களை சுலபமாக தீர்க்கிறார்கள் என்பது தான்.

சில நேரங்களில், ஒரு சண்டையை முடித்துக்கொள்வதும், மன்னிப்புக் கேட்பதும் எளிதானது. 'மன்னிக்கவும்' என்று சொல்வது ஒரு கலை. எல்லோரும் அதில் நல்லவர்கள் அல்ல. உங்கள் அன்பானவருடன் சண்டையிட்ட பிறகு நீங்கள் மன்னிப்பு கேட்க தயங்குகிறீர்கள் என்றால், 'மன்னிக்கவும்' என்று சொல்வது ஒரு அர்த்தமுள்ள அனுபவமாக இருக்க வேண்டும்.

நீங்கள் எப்போதாவது சண்டையிட்டிருந்தால், வாக்குறுதியை மீறிவிட்டால் அல்லது உங்கள் மனைவி/கணவனின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், உங்கள் துணையிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று கற்றுக்கொள்வது அவசியம்.

உண்மையில், உங்கள் கணவர் அல்லது மனைவியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரிந்துகொள்வது ஒரு முக்கியமான திருமணம் மற்றும் வாழ்க்கைத் திறன், ஏனென்றால் நாம் அனைவரும் இந்த சூழ்நிலையை கண்டிப்பாக எதிர்கொள்வோம்.

உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் மன்னிக்கவும்.

துணைகளின் சண்டைகளுக்கு இடையில் மன்னிக்கவும் என்று வார்த்தையை சொல்வது ஒருபோதும் எளிதான விஷயம் அல்ல என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

கட்டாயப்படுத்த வேண்டாம்...

மற்றவரின் தவறை ஏற்றுக்கொள்வது ஒரு விதம், ஆனால் நீங்கள் தவறு செய்ததாக மற்ற நபருக்கு தெரியப்படுத்துவது என்பது கசப்பான மாத்திரையை விழுங்குவதற்கு சமம் ஆகும்.

எனவே, உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்பதற்கு முன் உங்களுக்கு என்று சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நன்றாக சிந்தித்து செயல் படுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், அதற்காக...அதிக நேரம் எடுத்து கொண்டு அவர்களது கோபத்தை மேலும் அதிக படுத்தி விடாதீர்கள். சண்டைக்குப் பிறகு 'மன்னிக்கவும்' என்று வார்த்தையை நீங்கள் உங்களையே கட்டாயப்படுத்தி உங்கள் துணையிடம் கேட்க கூடாது.

அதற்கு பதிலாக தான், நீங்கள் உங்களுக்காக சிறிது நேரம் எடுத்து கொண்டு நடந்து முடிந்த சண்டைக்கான பொறுப்பு யார் என்று ஆராய வேண்டும். ஒருவேளை, நீங்கள் காரணமாக இருந்தால் மனம் முவந்து உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


ஆத்திரத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் சரியானதாக இருக்க முடியாது. நீங்கள் எடுத்து கொள்ளும் சிறிது நேரம் உங்கள் துணையும் யோசிப்பதற்கு வழிவகுக்கும்.

துணைகளுக்கிடையில் மனம் முன்வந்து கேட்கப்படும் மன்னிப்பானது அவர்களது உறவை மேலும் பலப்படுத்தும். அவர்கள் உறவுகளுக்கு இடையில் இருக்கும் புரிதலை மேலும் அதிக படுத்தும்.

இன்னும், நீங்கள் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேட்கத் தயங்குறீர்களா? அப்படியானால், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

உங்கள் துணைக்கு பிடித்த பரிசுகளை வாங்கிக் கொடுங்கள் அல்லது நீங்கள் எவ்வளவு வருந்துகிறீர்கள் என்பதை உங்கள் சைகைகள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.


உங்கள் கூட்டாளரை (candle light dinner) போன்ற இரவு உணவிற்கு அழைத்துச் செல்லாம். மற்றும் உங்கள் அழியாத அன்பைப் பற்றி அவருக்கு அல்லது அவளுக்கு புரிய வைக்கலாம். இது போன்ற எளிமையான யுக்திகளை கையாளலாம்.

இவை அனைத்திலும் முக்கியமானது என்னவென்றால், நீங்கள் முதலில் உண்மையிலேயே வருந்த வேண்டும், பின்னர் உங்கள் செயல் வார்த்தைகளை விட சத்தமாக உங்களது துணைக்கு உங்கள் அன்பை புரிய வைக்கட்டும்.


எழுதப்பட்ட சொற்களின் (மன்னிப்பு கடிதம்) மூலம் மன்னிப்பை வெளிப்படுத்துங்கள். சில நேரங்களில், பேசும் சொற்களின் மூலம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறி விடுவோம்,

ஆனால் நாம் அதை ஒரு காகிதத்தில் எழுதலாம். நம் மனதில் இருப்பதைக் குறிப்பது நம் எண்ணங்களை சிறப்பாகச் சேகரிக்க உதவும். பல சிறந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் காதலர்களை கவர்ந்த ஒரு காதல் கடிதத்தைப் போலவே இதையும் பாவித்து எழுதுங்கள்.

ஆனால் இந்த விஷயத்தில், இது ஒரு 'மன்னிப்புக் கடிதம்' போல இருக்கும், இக்கடிதத்தில் உங்கள் நடத்தைக்கு நீங்கள் எவ்வளவு வருந்துகிறீர்கள் என்பதைக் அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். ஒரு வேலை, உங்களது மன்னிப்பு கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்கள் துணையிடம் இருந்து பரிசுகள் கூட உங்களுக்கு கிடைக்கலாம்.


ஒரு சண்டைக்குப் பிறகு 'ஐ லவ் யூ' என்று சொல்வது துணைக்குகளுக்கு இடையில் அன்பை ஏற்படுத்துமா? ஆம்.கண்டிப்பாக .

எல்லோரும் இதற்கு உடன்படவில்லை என்றாலும், 'ஐ லவ் யூ' என்று சொல்வதும், உங்கள் துணையிடம் கிட்டத்தட்ட இதுவும் மன்னிப்பு கேட்பது போன்றது தான்.

நீங்கள் அவருடன் அல்லது அவளுடன் எவ்வளவு சண்டையிட்டாலும், நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் அன்பு ஒருபோதும் குறையாது என்பதை உங்கள் துணையிடம் உணர வைப்பது உங்கள் கடமை ஆகும்.

மன்னிப்பு கேட்க தயங்குபவரிடம் இருந்து 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை கேட்ட பின்னர், உங்கள் துணை ஆச்சரியத்தில் மற்றும் உங்கள் மீது கொண்டு உள்ள அளவு கடந்த அன்பில் உங்களை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தால் ஆச்சரியப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


திருமண பந்தத்தில் இருக்கும் பொழுது , உங்கள் மனைவியுடனோ அல்லது கணவருடனோ சண்டை இடுவது அல்லது சூடான வாக்குவாதம் செய்வது போன்றவை இயல்பான ஒன்றாகும். இது அனைத்து வீடுகளிலும் நடப்பதேயே.ஆனால், சில சமயங்களில் இந்த வாதம் உங்களை மோசமாக உணர வைக்க கூடும்.

நீங்கள் ஓருவேளை தவறு செய்துவிட்டால், உங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் ஒரு சிறந்த நபராக மாறுவீர்கள், அதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையும் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாறுவார்கள்,.

எனவே இது போன்ற சண்டைகள் மீண்டும் ஏற்படாமல் உங்களால் பார்த்து கொள்ள முடியும். உங்கள் காதலின் உண்மையான அன்பை புரிந்து கொண்டு சந்தோசமாக வாழ முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!