Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 மார்ச், 2020

மனைவி பசியாக வருவாள்..! கடாயை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

த்தரப் பிரதேசத்தில் மனைவிக்காக பிணத்தின் உடல் பாகங்களை சமைத்து கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டை பத்திரமாகா பார்த்துக்கசொல்லிவிட்டு மார்க்கெட்டுக்கு சென்று வந்த மனைவிக்கு ஆசை ஆசையாய் கை கிரேவி செய்து வைத்த கணவன் தற்போது கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஆசாமி. இவருடைய மனைவி மளிகை பொருட்களை வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள வார சந்தைக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்ற அவர், அங்கு தனது கணவர் இரவு உணவுக்காக எதையோ சமைப்பதை பார்த்துள்ளார்.

சமையல் முடிந்த பிறகு அந்த உணவை சாப்பிட இருவரும் தயாராகினர். கணவர் ஏற்கெனவே அதிகம் குடி போதையில் இருந்ததால், எதையும் சொல்லாமல் அந்த அசைவ உணவை ருசித்த பெண் சில நொடியிலேயே வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அந்த உணவை குறித்து ஆய்வு செய்தபோதுதான் தெரிந்தது, அது சுடுகாட்டில் சரியாக வேகாத பிணத்தின் கை என்று.
இதையடுத்து அதிர்ந்து போன அப்பெண் வீட்டுக்கு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு, அக்கம்பக்கத்தினருக்கு சம்பவத்தை கூறி அழுதுள்ளார். பின்னர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த குடிகார கணவனை பிடித்து விசாரித்தனர். அதில், சம்பவம் அன்று மது குடித்த அவர் நேராக கங்கை கரைக்கு சென்றுள்ளார். அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறினார். இதை கேட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!