Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 மார்ச், 2020

கொரொனாவை விட மனிதன் கொடூரமானவன்: சானிடைசர் வாங்க கடைக்கு சென்ற பால சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி


Bala Saravanan
கொரோனா அதிகம் பரவு வரும் இந்த சூழ்நிலையில் லாப நோக்கத்தில் செயல்படும் சிலர் பற்றி கோபத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் பால சரவணன்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும். ஹேன்ட் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியையை பயன்படுத்தி கைகளை வைரஸ் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க வேண்டாம் எனவும், தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் முக கவசங்கள் மற்றும் ஹேன்ட் சானிடைசர்கள் அதிகபட்ச விலையை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு கடைகளில் விற்கப்படுகின்றன. இது தொடர்பாக நடிகர் பால சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"கொரோனாவை விட மனிதன் கொடூரமானவன். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேன்ட் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு போனேன். 60 ருபாய் சானிடைசரை 135 ரூபாய் என்று விலை சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு 'நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்' என கடையில் இருந்தவர் கூறினார். சரி என வாங்கி வந்துட்டேன்."

"இன்று ஒரு காபி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தோம். அங்கு கையை சுத்தம் செய்து கொள்ள சானிடைசர் கொடுத்தார்கள். அவர்களும் அதிக விலைக்கு தான் வாங்கி வைத்திருப்பதாக சொன்னார்கள். மற்ற நண்பர்களும் வேறு கடைகளில் அதிக விலைக்கு வாங்கியதாக கூறினார்கள்."

"இந்த மாதிரி அவசரமான சூழ்நிலையில் லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வது எவ்வளவு கேவலம். கொரோனாவை விட மனிதன் தான் கொடூரமானவன். இந்த மாதிரி நேரங்களில் அதன் விலையை குறைத்து தான் கொடுக்கவேண்டும். காசு இல்லாதவர்கள் எப்படி அதை வாங்குவார்கள்."

"இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் ஜாதியை ஒழியாது, ஏற்றதாழ்வு மாறாது, எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது" என கோபத்துடன் பேசியுள்ளார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!